முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் என்கவுண்ட்டரில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தா ராம் பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. சுக்மா மாவட்டத்தின்  கிஸ்தா ராம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சிறப்பு பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் இணைந்து கூட்டாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

வெடி பொருட்கள் ...

இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பர்மார் துப்பாக்கி, தோட்டாக்கள், வெடி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என போலீஸ் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 36 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். 651 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து