எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- 1938ம் ஆண்டில் இந்திய தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய அடக்கு முறைகளை எதிர்த்து வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தலைமையில் வீரமுடன் போராடிய திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் குறித்த தகவல்களும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு விடுதலைப்போராட்ட தியாகிகளின் பெயர்களும் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் எழுதிய கடிதத்தின் மூலமாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்திய தாய்த்திருநாட்டிற்கு விடுதலை வாங்கிக்கொடுத்தே தீரவேண்டும் என்று மக்கள் உணர்ச்சிப் பிளம்பாக போராடிக் கொண்டிருந்த சமயம் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரை தலைமையிடமாகக் கொண்டு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் தலைமையில் 1938ம் ஆண்டில் கட்டுக்கோப்பான தொண்டர்படையுடன் கூடிய ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் என்ற அமைப்பு ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியபடி இருந்துள்ளது.சுதந்திரப்போராட்டத்தின் போது பல்வேறு அமைப்புக்கள், தனிமனிதர்கள், கூட்டணிகள்,தொண்டர்படைகள்,மன்னர்கள்,ஜமீன்தார்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் களம் கண்டிருந்த நிலையில் திருமங்கலம் நகரில் 1938ம் ஆண்டு செயல்பட்டுவந்த ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து வீரமுடன் போராடி வந்துள்ளது.
இந்த சங்கத்தின் தலைவராக வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களும் பொக்கிஷதாரராக தியாகி.ஜி.வெங்கிடாத்திரி நாயுடுவும்,காரியதரிசிகளாக எஸ்.வி.சுப்பிரமணியன் மற்றும் எ.சிதம்பரம் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமுடன் செயல்பட்டு வந்துள்ளனர்.நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்க ஆயதப்படைகளுடன் போராடிய சுபாஷ்சந்திர போஸின் வீரத்தை பறைசாற்றிடும் வகையில் சுபாஷ் என்ற பெயர் முதலாவதாகவும் அஹிம்சை வழியில் சுதந்திரத்திற்கா போராடிய காந்தியடிகளின் அழைப்புப் பெயரான பாபுஜியை பாபு என்ற பெயரில் இரண்டாவதாகவும் இணைத்து வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தனது தலைமையில் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கத்தை துவக்கியுள்ளார்.இந்த சங்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேரடி உறுப்பினர்களாகவும்,ஆயிரக்கணக்கானோர் மறைமுக தொண்டர்களாகவும் இணைந்துள்ளனர்.
இந்த சங்கத்தின் பிண்ணனியில் தான் தியாகி விஸ்வநாததாஸ் தனது உணர்ச்சி மிகுந்த நாடகங்கள் வாயிலாக மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டி வந்துள்ளார்.அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் சுதந்திரபோராட்டங்களை முன்னெடுத்து நடத்திய தீரர் சத்தியமூர்த்தி,வ.உ.சிதம்பரம் பிள்ளை,காமராஜர் போன்றோரிடம் மிகவும் நெருங்கிப்பழகிய விஸ்வநாததாஸ் வீரம் மற்றும் விவேகத்துடன் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடிடத் தான் இந்த சங்கத்தை துவக்கியுள்ளார்.இவருக்கு பக்கபலமாக திருமங்கலத்தைச் சேர்ந்த ஜி.வெங்கிடாத்திரி நாயுடு,எஸ்.வி.சுப்பிரமணியன்,எ.சிதம்பரம்,ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன்,நாடக நடிகர் சங்க அருணாச்சலம்,சுவாமி நித்தியானந்தஅடிகள் போன்றோர் இருந்துள்ளனர்.
அப்போது 1938ம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கமும் தன்னை இணைத்துக்கொண்டு தென்னிந்தியா முழவதிலும் தனது தொண்டர் படையைக் கொண்டு கடுமையாக மோதியுள்ளது.குறிப்பாக 1938ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் மற்றும் ஆங்கிலேயர் அடக்குமறைகளை எதிர்த்து திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்நேரம் சங்கத்தின் மதுரை தொண்டர் படையுடன் திருமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரமும் ஜமீன்தார் சீமைராஜபாண்டியனும் போராடுவதற்காக சென்றுள்ளனர்.அதில் கைதாகி சிறையிலிருந்த ஜமீன்தார் சீமைராஜபாண்டியன் ஜெயிலிலே உயிரிழந்து நாட்டிற்காக தனது உயிரை விட்டார்.
இந்த விபரங்களையெல்லாம் தியாகி விஸ்வநாததாஸ் 1938ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி தான் எழுதியிருந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.வந்தேமாதரம் அல்லாஹ_அக்பர் என்று மதசார்பற்று துவங்கி திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் என்ற லெட்டர்பேடில் இருந்த அந்த கடிதத்தின் விபரம்: திருவிதாங்கூர் அடக்குமுறை நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.மதுரை தொண்டர் படையுடன் நமது சங்கத்தின் சார்பாக திருமங்கலத்திலிருந்து சிதம்பரமும்,ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியனும் சென்றிருந்ததர்கள்.சீமைராஜ் பாண்டியன் அவர்கள் ஜெயிலில் உயிர்நீத்தார்.பத்திரிக்கை வாயிலாக தாங்கள் பார்த்திருக்கலாம்.சிதம்பரம் இன்னும் அங்கிருந்து வரவில்லை.நமது நடிகர் சங்கத்தின் சார்பாக அருணாச்சலம் சென்றிருந்தான்.அரெஸ்ட் செய்து விட்டுவிட்டார்கள்.மதுரைக்கு வந்துவிட்டான்.இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நானும் சுவாமி நித்தியானந்தஅடிகள் அவர்களும் திருவிதாங்கூர் தலைமையை பார்த்துவர அங்கு புறப்படுகிறோம்.மற்ற விபரங்கள் தங்கள் கடிதம் பார்த்து.மதுரையில் எல்லோரும் சுகம் என்று அந்த கடிதத்தில் உள்ளது.
இந்த கடிதத்தின் வாயிலாக இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பங்கேற்றுப் போராடிய சுபாஷ்பாபு வாலிபர் இயக்கத்தின் பெயர் தற்போது வெளிவந்திருப்பதுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடிய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜி.வெங்கிடாத்திரி நாயுடு,எஸ்.வி.சுப்பிரமணியன்,எ.சிதம்பரம்,ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன்,நடிகர்சங்க அருணாச்சலம்,சுவாமி நித்தியானந்தஅடிகள் மற்றும் மதுரை தொண்டர்படையின் பெயர்கள் வெளியுலகிற்கு உதயமாகியுள்ளது.நாடு சுதந்திரம் பெற்று பல்வேறுதுறைகளில் விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் இன்றைய தமிழக இளைஞர்கள் நடிகர்களின் பெயர்களில் ரசிகர் மன்றங்கள் துவங்கியிருப்பதும் கிராமப்பகுதிகளில் வருத்தமில்லா வாலிபர் சங்கங்கள் அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் எந்தவித ஆதாயமுமின்றி நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 1938ம் ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தலைமையில் கடுமையாகப் போராடிய திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொக்கிஷமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.