முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக பணியாற்றிய சி.பி.ஐ.அதிகாரிகள் 28 பேருக்கு ஜனாதிபதியின் போலீஸ் விருது

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய 28 சி.பி.ஐ. போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் போலீஸ் விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி சி.பி.ஐ. பிரிவில் சிறந்த முறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி போலீஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு விருதுக்கு தேசியவாதி நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தீர்வுகாண சனதான் சன்ஸ்தா உறுப்பினர்களை கைது செய்த மும்பை மாவட்ட சிறப்பு குற்றவியல் சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி நந்தகுமார் நாயர் உள்பட 28 பேர்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பர்தா முகர்ஜி, சுந்தரவேல் முருகவேல், பிரபஞ்சன் சக்ரவர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் டபுள்யூ. அசோக் குமார் சிங், தலைமை காவலர் பி.சசிகுமார் உள்பட 28 சி.பி.ஐ.போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதி போலீஸ் மெடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 28 பேர்களில் ஐ.பி.எஸ். சி.பி.ஐ. அதிகாரிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து