முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க அணிகள் இணைப்பு விரைவில் நடக்கும் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்லது நடக்கும் என்று நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

விரைவில் இணையும் ...

நிதியமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் உருவாக்கிய, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம். 100 வருடங்களுக்கு பின்னரும் மக்களுக்காக பாடுபடும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். அம்மா ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். இரு அணிகளும் விரைவில் இணையும். இதற்கான நல்ல முடிவு விரைவில் எட்டப்படும். இணைப்புக்கான நடவடிக்கைகள், முழுமையான செயல்வடிவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி, அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். அதன் பின்னர் நிருபர்களுக்கும் பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய கருத்து சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. விரைவில் நல்லது நடக்கும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
கலந்து கொள்ளவில்லை

இதைத்தொடர்ந்து, தினகரன் பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க கூட்டணிக்கட்சி எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி நிருபர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, அவர்கள் எந்த அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தார்கள் என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் தினகரன் பொதுக்கூட்டத்தில் மேலூர் எம்.எல்.ஏ செல்வம் என்கிற பெரியபுள்ளான் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க விவசாய அணி செயலாளர் துரை கோவிந்தராஜன், தினகரனை நீக்கும் தீர்மானத்தில் தெரியாமல் கையெழுத்து போட்டுள்ளதாக கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு அவர் எந்த சூழ்நிலையில் அப்படி தெரிவித்தார் என்பது எனக்கு தெரியாது. 72 வயதான துரை கோவிந்த ராஜன், மைனர் இல்லை. மேஜர் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.

மாபெரும் துரோகம்...

தினகரனை தான் நீக்கியிருக்கீறீர்கள்,. இன்னமும் சசிகலாவை நீக்கவில்லையே என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலளிக்கையில், தினகரன் குடும்பத்தின் தொடர்பி்ல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பும் தேர்தல் ஆணையத்தின் முடிவும் வந்தபின்னர் தான், எதுவும் சொல்ல முடியும்,. இது ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரையும் வைத்து அழகு பார்க்க மாட்டோம். இதை விட அழகாக கூற முடியாதே என்றார். அவர் எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்து பேசக்கூடாது. ஆட்சியை கவிழ்ப்போம் என்றும், ஆட்சியின் மீது சேற்றை வீசுகிறோம் என்று தெரியாமல் பேசக்கூடாது. தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். அதற்கு தினகரன் மறுப்பு தெரிவிக்க வேண்டுமே தவிர தேவைப்பட்டால் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொல்வது, மாபெரும் துரோகம், அதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள், என்று அவர் தெரிவித்தார்.

இணைப்பு முயற்சி ....

பிரதமர் மோடி அ.தி.மு.க அணிகள் இணைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவது பற்றி நிருபர்கள் கேட்டபோது, நல்ல முயற்சியை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இதில் பாலம், ஆறு, கடல் கிடையாது. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் இணைப்பு முயற்சி மேற்கொள்ளலாம். அது வரவேற்கத்தக்கது வரும் டிசம்பர் மாதம் எம்ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடத்தப்படும். இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். சம்பந்தமில்லாமல் நிர்வாகிகள் நியமனம் செய்து கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். தினகரன். அவருடைய காழ்ப்புணர்ச்சி அரசியலை யாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து