முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவோம்: அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

டெஹரான் : ஈரான் மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதித்தால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம் என்று அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம் என்று ஈரான் உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தார். தற்போது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி நேற்று கூறியதாவது:

சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஈரான் முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறது. ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தை உடைக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்கிறார். ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளார். அவர் மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தால் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து