எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் : டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது தமிழ்நாட்டின் நன்மைக்காகத்தான் என்று கடலூர் விழாவில் முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
கடலூரில்...
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தமிழக அரசு நடத்தி வருகிறது. மதுரையில் துவங்கிய இந்த விழா திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிறகு நேற்று கடலூரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கடலூரின் பெருமைகளை பற்றி முதல்வர் பேசினார். விழாவில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர்
விழாவில் அவர் பேசியதாவது:-
இன்றைக்கு அம்மா (ஜெயலலிதா) என்னென்ன கனவு கண்டார்களோ அதையெல்லாம் அம்மாவினுடைய அரசு நிறைவேற்றி வருகின்றது. விவசாயிகள் இந்த நாட்டிற்கு தூணாக விளங்குகின்றார்கள். விவசாயம் செழிக்க வேண்டும், விவசாயிகளுக்கு தேவையான நன்மைகள் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அம்மா வழியில் வந்த அம்மாவினுடைய அரசு விவசாயிகள் நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்களையெல்லாம் தூர்வார வேண்டும் என்பதற்காக குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை அறிவித்தது.
விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கி 1519 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு, அரசும் சேர்ந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக அரசு தருகின்றது. இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளி தங்கள் நிலங்களுக்கு எருவாக இடுகின்றபோது, அந்த விவசாயிகள் பயிரிடுகின்றபொழுது, அதில் அதிகமான விளைச்சல் பெற்று, அதிகமான லாபம் பெறக்கூடிய சூழ்நிலையை அம்மாவினுடைய அரசு ஏற்பாடு செய்திருக்கின்றது.
ரூ.300 கோடி ஒதுக்கீடு
இதுவரைக்கும் எந்த அரசும் செய்ய முடியாத திட்டம். இன்றைக்கு விவசாயிகளுடைய மேம்பாட்டிற்காக, விவசாயிகளுடைய வளர்ச்சிக்காக, விவசாயிகளுடைய வளர்ச்சி மேலும், மேலும் சிறப்படைய, விளைச்சல் அதிகரிக்க, வருமானம் இரட்டிப்பாக பெறுவதற்காக, இந்தத் திட்டத்தை அம்மாவினுடைய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்தத் திட்டம் சிறப்பான திட்டம் என்று விவசாயிகள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் வந்ததன் விளைவாக, மேலும் இந்த திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழகத்தில் 2065 ஏரிகள் இந்தத் திட்டத்தின் மூலமாக எடுத்துக் கொள்ள இருக்கின்றது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலமாக, ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்கள் மூலமாக விவசாயிகள் வண்டல்மண் அள்ளுகிறார்கள்.
மழைநீர் வீணாகாமல் ...
வண்டல்மண் அள்ளுகின்ற பொழுது, தூர்வாருகின்ற பொழுது, அந்தக் குளம் ஆழமாகின்றது. ஆகவே, பருவகாலங்களிலே பெய்கின்ற மழைநீர் முழுவதும் அந்த ஏரி, குளங்களில் சேமிக்கப்படுகிறது. வறட்சியான காலத்தில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்திற்கு தேவையான நீர், குடிதண்ணீருக்கு தேவையான நீர் இந்தத் திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது. இந்த அற்புதமான திட்டத்தால் விவசாயிகளும் பயன்பெறுகிறார்கள், பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாதுகாக்கின்ற திட்டம் குடிமராமத்து திட்டம் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தடுப்பணைகள் கட்ட நிதி...
அதேபோல அம்மாவினுடைய அரசு மூன்றாண்டுகளுக்கு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலே 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தோம். ஆங்காங்கே இருக்கும் ஓடைகளின், நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, பருவகாலங்களிலே பெய்கின்ற மழைநீர் ஆங்காங்கே சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயரவேண்டும் என்பதற்காக மூன்றாண்டுகளிலே தடுப்பணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக, அம்மாவினுடைய அரசு 350 கோடி ரூபாய் இந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர்நிலைகளை உயர்த்தி, மக்களுக்கு தேவையான நீரை சேமிக்கக்கூடிய வகையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
விவசாயிகளுக்கு முன்னுரிமை ...
அதுபோல நீர்வள, நிலவள திட்டத்தின் மூலமாக இன்றைக்கு, தமிழகம் முழுவதும் 220 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்காக 787 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே, இத்திட்டத்தின் மூலமாக வாய்க்கால்கள், ஏரிகள், மதகுகள் புதுப்பிக்கப்படும். இதன் மூலமாக, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்துக் கொள்ளப்படும். இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு இந்த அரசு என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல. கடலூர் மாவட்டம், விவசாயம் நிறைந்த மாவட்டம், விவசாயத்தை நம்பி வாழ்கின்ற அதிகமான விவசாயிகள் இருக்கின்ற மாவட்டம், விவசாயிகள், விவசாய தொழில்கள் அதிகமாக இருக்கின்ற பகுதி இந்த கடலூர் மாவட்டம்.
ரூ.2244 கோடி நிவாரண...
ஆகவே, கடலூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களை அம்மா வாரிவாரி கொடுத்திருக்கின்றார்கள் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல. கடந்த 140 ஆண்டுகாலமாக இல்லாத கடுமையான வறட்சி, பருவமழை பொய்த்து விட்டது. அப்படி இருந்தும்கூட, தமிழகத்தில் விலைவாசி ஏறாமல் அம்மாவினுடைய அரசு பார்த்துக் கொண்டது. இப்படிப்பட்ட கடுமையான வறட்சியிலும் ஆங்காங்கே குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கிய அரசு இந்த அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 2244 கோடி ரூபாய் அளித்து, அந்தத் திட்டம் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒரே மாநிலம் தமிழ்நாடு
அதே போல, கல்விக்கு முன்னுரிமை. ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி, கல்வியை மையமாக தான் வைத்திருக்கின்றது. எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு மாநிலத்திலும் கல்வி அறிவு அதிகமாக இருக்கின்றது என்று பார்த்தால், அங்கே வளம் பெறும், சமூக பொருளதார மேம்பாடு அடையும். அங்கே அமைதி, அன்பு, திறமை இருக்கும். அத்தனையும் வேண்டுமென்றால் கல்வி வேண்டும். அப்படிப்பட்ட கல்வியை அம்மா தந்தார்கள். அம்மா, கல்வியில் ஒரு புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வியில் அதிக நிதி ஒதுக்கீடு செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏனென்று சொன்னால், ஒரு நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு மாநிலம் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், கல்வி அறிவு தேவை. அதற்கு அம்மா எடுத்த நடவடிக்கை ஏராளம். அம்மா கல்வியிலே புரட்சி ஏற்படுத்தியதன் விளைவு, இன்றைக்கு நம்முடைய மாணவர்களுடைய தரம் உயர்ந்திருக்கின்றது, உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. ஆகவே 2011 ஆம் ஆண்டு அம்மா முதல்வராக பொறுப்பேற்ற பொழுது, அப்பொழுது 100க்கு 21 சதவீதம் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அம்மா கல்வியில் எடுத்த நடவடிக்கை, கல்வியில் ஏராளமான திட்டங்களை நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்ததன் விளைவாக இன்றைக்கு கல்வியினுடைய சதவீதம், உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை 44.3 சதவீதமாக உயர்ந்து இன்றைக்கு தமிழகம் கல்வியிலே ஒரு உயர்ந்த மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
65 புதிய கல்லூரிகள் ...
இந்திய அளவில் பார்க்கும் பொழுது 24.5 தான். தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல, அம்மா ஆங்காங்கே கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதாரண குடும்பத்திலே இருக்கின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்கவேண்டும், பட்டப் படிப்பு படிக்கவேண்டும் என்பதற்காக அம்மாவினுடைய 6 ஆண்டு கால ஆட்சியிலே ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழகத்திலே நிறுவினார்கள். ஆறாண்டு கால ஆட்சியிலே 4 பொறியியல் கல்லூரிகள், 16 பாலிடெக்னிக் கல்லூரிகள், 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என்று மொத்தம் 65 கல்லூரிகள் துவக்கப்பட்ட அரசு அம்மாவினுடைய அரசு. இன்றைக்கு குறைந்த கட்டணத்திலே உயர்கல்வியை நம்முடைய மாணவச் செல்வங்கள் அம்மாவினுடைய ஆட்சியில் தான் கல்வி கற்றார்கள்.
சரித்திரம் கிடையாது
எனவே தான் இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் ஆறாண்டு காலத்தில் இத்தனை கல்லூரிகளை உருவாக்கிய சரித்திரம் கிடையாது. அம்மா தான் செய்தார்கள். இன்றைக்கு வசதி படைத்தவர்கள் எல்லாம் தனியார் கல்லூரிகளில் படித்து, பட்டம் பெற்று வேலைக்கு சென்று விடுகிறார்கள். ஆனால் ஏழை குடும்பத்திலே பிறந்த தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகள் எல்லாம் தனியார் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத சூழ்நிலை. இப்படிப்பட்ட மாணவர்களும் சமமாக இருக்கவேண்டும் என்பதற்காக அம்மா அரசுக் கல்லூரியை உருவாக்கி, இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்கு வித்திட்டவர் அம்மா.
இந்த ஆண்டு 8 கல்லூரிகள்...
அம்மா வழியில் நடக்கும் அம்மாவினுடைய அரசு இந்த ஆண்டு 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்திருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, உங்களுடைய மாவட்டத்திலும் அம்மாவினுடைய அரசு ஒரு அரசு மற்றும் அறிவியில் கல்லூரியை உங்களுடைய பகுதிக்கு கொடுத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். காட்டுமன்னார் கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அம்மாவினுடைய அரசு தந்திருக்கின்றது, இந்த ஆண்டே துவக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே ஏழை மாணவன் படிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை கொடுத்திருக்கின்றோம். அதேபோல, 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் என்று மொத்தம் 11 கல்லூரிகள் துவங்கப்பட்டிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் நன்மைக்குத்தான்...
அதேபோல, அம்மாவினுடைய ஆட்சியிலே மீனவர்களை விடுதலை செய்த அரசு அம்மாவினுடைய அரசு. சிலபேர் பேசுகின்றார்கள். அடிக்கடிடெல்லிக்கு சென்று பாரதப் பிரதமரை சந்திக்கிறார்கள், என்ன சாதித்தார்கள் என்றெல்லாம் சொல்கின்றார்கள். நாங்கள் அடிக்கடி பிரதமரை சந்தித்ததன் விளைவு தான் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். அடிக்கடி டெல்லி சென்று பாரதப் பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திப்பது தமிழ்நாட்டினுடைய நன்மைக்குத் தான் என்பதை இந்த நேரத்திலே கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
அதே போல, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி போன்ற பகுதிகளில் ஏழை, எளியோர்கள் வீடுகட்டுவதற்காக 2,10,000 ரூபாய் மானியமாக அரசின் சார்பாக கொடுக்க இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். நெசவாளர்களுக்கு மின்சார சலுகை, விசைத்தறி நெசவாளர்களுக்கு விசைத்தறி தொழில் செய்பவர்களுக்கு மானியத்திலே மின்சாரம், இப்படி பல்வேறு திட்டங்களை அம்மாவினுடைய அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி