எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதல் தகுதிச்சுற்று
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீசை எதிர்கொண்டது. இலங்கை டெஸ்ட் தொடரில் ஆடிய அபினவ் முகுந்த் தாயகம் திரும்பிய உடனே தூத்துக்குடி அணியில் இணைந்து களம் இறங்கினார்.
2 விக்கெட்டுகள்...
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத், தலைவன் சற்குணம் அடியெடுத்து வைத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 2-வது ஓவரில் கோபிநாத் (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் பந்து வீச்சில் அஸ்வின் கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4-வது ஓவரில் தலைவன் சற்குணமும் (11 ரன்கள்) அதிசயராஜ் டேவிட்சனின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 13 ரன்னுக்குள் கில்லீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
கார்த்திக் 33 ரன்...
3-வது விக்கெட்டுக்கு வசந்த் சரவணன், கார்த்திக்குடன் இணைந்தார். கார்த்திக் அடித்து ஆடினார். ‘பவர் பிளே’ முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து இருந்தது. அணியின் ஸ்கோர் 50 ரன்னை எட்டிய போது வசந்த் சரவணன் (7 ரன்) அஸ்வின் கிறிஸ்ட் பந்து வீச்சில் அவுசிக் சீனிவாசிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து கார்த்திக் 26 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கினார்.
பின்வரிசை வீரர்கள் ...
தூத்துக்குடி அணியின் நேர்த்தியான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. கில்லீஸ் வீரர்கள் நிதானத்தை இழந்து அவசரகதியில் ஷாட்டுகளை அடிக்க முற்பட்டது, சரிவுக்கு வித்திட்டது. சசிதேவ் 2 ரன்னிலும், கேப்டன் சதீஷ் 2 ரன்னிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அந்தோணி தாஸ் மட்டும் கொஞ்சம் ஆறுதல் அளித்தார். அவர் 27 ரன்கள்(17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். பின்வரிசை வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. 20 ஓவர் களை முழுமையாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 114 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. யோமகேஷ் 17 ரன்னுடன் (23 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். தூத்துக்குடி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
வாஷிங்டன் சுந்தர் அபாரம்
அடுத்து 115 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தூத்துக்குடி அணி அதிரடியில் வெளுத்து கட்டியது. வாஷிங்டன் சுந்தர், யோமகேஷின் முதல் ஓவரிலேயே 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விளாசி அசத்தினார். அதே போல் தமிழ்குமரனின் ஓவரில் 4 பவுண்டரியும், ஒரு சிக்சரும் விரட்டினார். அவரது தடாலடியான ஷாட்டுகளால் தூத்துக்குடி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. வெறும் 15 பந்துகளில் அவர் அரைசதத்தை கடந்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக
அரைசதம் இது தான். மறுமுனையில் அவரது ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் கவுசிக் காந்தி 9 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் சந்தித்த முதல் பந்திலேயே கிளன் போல்டு ஆனார். இருப்பினும் தூத்துக்குடியின் வீறுநடைக்கு கில்லீஸ் பவுலர்களால் எந்த வகையிலும் முட்டுக்கட்டை போட முடியவில்லை.
8 விக்கெட் வித்தியாசத்தில் ...
தூத்துக்குடி அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதுவரை தோல்வியே சந்திக்காத தூத்துக்குடி அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிசுற்றுக்கு வந்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 73 ரன்களுடன் (36 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), அபினவ் முகுந்த் 33 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
இன்னொரு வாய்ப்பு ...
ஆல்-ரவுண்டராக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் இதுவரை 445 ரன்கள் குவித்துள்ள அவர் ஒரு சீசனில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். தோல்வி அடைந்தாலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடும். இந்த ஆட்டம் நாளை நெல்லையில் நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.