முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராதாபுரம், முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி உத்தரவு

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கேரளாவில் சாலைவிபத்தில் உயிரிழந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கேரளாவில் பாரிப்பள்ளி-கொல்லம் சாலையில், கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடியிருப்பு மேலூரைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் முருகன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

நிதியுதவி...

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில், முத்து என்பவர் பலத்த காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த சாலை விபத்தில் உயிரிழந்த முருகன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த முத்துவுக்கு 50,000/- ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து