முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் நவாஸுக்கு சம்மன்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 1990-களில் நவாஸ் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் ‘பனாமா பேப்பர்ஸ்’ மூலம் கடந்த 2016-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் உடனடியாக விலக உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்த கடந்த 28-ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நவாஸ் மீதான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் வழக்கு விசாரணைக்காக லாகூர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் ஹூசைன், ஹாசன் ஆகியோருக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் மனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து