எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மதுரை மேற்குசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.90 ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு மற்றும் நேரு தெரு ஆகிய பகுதிகளில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்து வார்டு எண்.88 சோலையழகுபுரத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடையே பேசியதாவது:-
மறைந்த முதல்வர் அம்மாவின் அரசானது மக்கள் நல திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றது. அம்மா வகுத்து கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு துறையாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த மாதம் வார்டு எண்.90 மற்றும் 91 பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது சில பகுதிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறும், சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி என பல்வேறு வசதிகள் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் வீரகாளியம்மன் கோவில் அருகிலும், நேரு தெருவிலும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டு நீர் நிலைகள் அனைத்தும் வற்றி விட்ட போதும் மதுரை மாநகராட்சி திட்டமிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு 4 நாட்களுக்கு ஒருமுறை குழாய்கள் மூலமும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வார்டு எண்.88 மிகப்பெரிய வார்டுப்பகுதி ஆகும். இப்பகுதியில் தாழ்வான பகுதிக்கு தண்ணீர் வருகின்றது மேடான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே தேவையான பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் விரைவில் அமைக்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கையான ஜானகி நகர் மேட்டுத்தெரு, ராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. மேலும் ராமமூர்த்தி நகர் 2 மற்றும் 5 வது தெரு, வ.உ.சி. தெரு, ஜானகி நகர் குறுக்குத் தெரு, அப்பள கம்பெனி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜானகி நகர் 1 வது, 2 வது தெரு, மகாலெட்சுமி நகர் தெரு, எம்.கே.புரம் மெயின் ரோடு, ஜானகி நகர் குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. இந்திரா நகர் கடைசி தெருவிலும், சத்துணவு சந்து இராமமூர்த்தி நகர் 2 வது தெருவில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்குவதற்கு மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகளவில் மக்கள் வருவதால் இடப்பற்றாக்குறை உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இடவசதி இல்லாத காரணத்தினால் சுகாதார நிலையத்தின் மேற்புரத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடம் விரைவில் கட்டப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் சார்பில் 32 மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள சட்டமன்ற அலுவலகத்திலும், நேரில் என்னிடத்திலும் வந்து கோரிக்கை மனுக்கள் வழங்கலாம். எனது அலுவலகத்தில் கோரிக்கை மனு வாங்குவதற்கு என்று தனிநபர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். அம்மனுவினை பெற்று துறை அலுவலர்கள் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அம்மாவின் அரசு அமைதியும் வளமும் மிகுந்த ஒளிமயமான அரசாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குதல், குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், இலவச தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட 85 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் க.கார்த்திக்கேயன், உதவி ஆணையாளர் கௌசலாம்பிகை, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிசெயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், செந்தில், உதவிப்பொறியாளர் தியாகராசன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி