முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இனி செல்லமாட்டேன்: ஓவியா

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா மிகவும் பிரபலமடைந்தார். நிகழ்ச்சியின் சூழல் மற்றும் சக பங்கேற்பாளர்களால் மன அழுத்தத் திற்கு ஆளான ஓவியா தற்கொலை முயற்சி செய்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு முதன்முதலாக ஒரு வீடியோ ஒன்றை அவர் வெளியிட் டுள்ளார். அதில், வெளியில் வந்த பிறகுதான் தனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று தெரிந்ததாகவும் இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.ஆனால் வெளியில் தற்போது மிகவும் தவறான ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜூலி மற்றும் சக்தி வெளியே வந்துவிட்டார்கள். அவர்களின் நிலையை நினைத்து வருத்தமாக இருக்கிறது. ஜூலியையும் சக்தியையும் வெளியில் தவறாக நடத்துகிறார்கள். தவறு செய்வது மனித இயல்பு. இந்த ஊரில் பெரிய பெரிய தவறுகளை செய்தவர்களையே அரசு மன்னித்துவிடுகிறது.

இந்நிலையில் அவர்களை தவறாக நடத்துவது சரியல்ல. மற்றவர்களை காயப்படுத்தும் ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. பலர் என்னிடம் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி செல்வேனா என்று கேட்கிறார்கள். நான் ஒரு போட்டியாளராக அந்த வீட்டிற்குள் திரும்பிச் செல்ல மாட்டேன். இனிமேல் என்னை நீங்கள் படங்களில் பார்க்கலாம். எனக்காக படத்தை பார்க்க வேண்டும். படம் நன்றாக இருந்தால் பாருங்கள்.ஆரவுடன் காதல் இருக்கா, மன அழுத்தம் இருக்கா என்று பலர் கேட்டனர். மன அழுத்தம் எல்லாம் கிடையாது. உண்மையான காதல் தோற்காது. நீங்கள் என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம். என் காதல் உண்மையானது. அதை நான் திரும்பப் பெறுவேன் என்றார் ஓவியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து