முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரோகன் போபண்ணா, சானியா மிர்சா முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் போபண்ணா ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கும், நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கும் முன்னேறினர்.

போபண்ணா ஜோடி...
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, ஜூவான் செபஸ்டியான் கேபல்-பேபியோ போக்னினி ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5-7, 7-5, 10-8 என்ற செட்கணக்கில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தது. போபண்ணா-டோடிக் ஜோடி, அரையிறுதிக்கான ஆட்டத்தில் இரண்டாம் தரநிலை ஜோடியான லூகாஸ்-மார்சிலோ ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

சானியா முன்னேற்றம்
அதேசமயம், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-ஷூவாய் பெங் ஜோடி, அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி காலிறுதியில் இரினா-ரலுகா ஜோடியை 6-3 6-7(1) 10-3 என்ற செட்கணக்கில் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து