முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கொளத்தூர் தொகுதியில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  சைதை துரைசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து,

உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மனு செய்தார்...
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து