முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்லாம் விவகாரம்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது.

சீனா மிரட்டல்
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்து உள்ளதால் அங்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக  பதட்டம் நிலவுகிறது.

ஜப்பான் ஆதரவு
இந்த நிலையில், டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி  ஹிரமட்சூ
செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், கூறியதாவது:-
“ இந்த பிரச்சினை சீனாவுக்கும் பூடானுக்கும் இடையேயானது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இருநாடுகளும் சர்ச்சை இருப்பதை உணர்ந்து இருக்கிறது. பிரச்சினைக்குரிய பகுதியில் எது முக்கியம் என்றால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் ஒரு தலைபட்சமாக  எந்த நிலைப்பாட்டையும் மாற்றாமல் அமைதியான முறையில் சுமூகமாக பிரச்சினையை தீர்க்க வேண்டும்” என்றார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஜப்பான் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து