முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மீது லல்லு, தேஜஸ்வி கடும் தாக்கு

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

பட்னா : முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் நிதீஷ்குமார் அரசு மீது கடும் தாக்குதலை தொடுத்தனர்.

முதல் மரணம் ...

நிதீ பரிமாற்றம் வழக்கில் ஒரு முக்கிய குற்றவாளியின் மரணத்தை அடுத்து இருவரும் நிதீஷ் அரசினை கடுமையாக விமர்சித்துள்ளனர். லல்லு தனது ட்விட்டர் கணக்கில் “ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. தற்போது இறந்துள்ளவர் பாகல்பூர் பகுதியில் நிதீஷ் குமாரின் கட்சியின் செல்வமிக்க தலைவரின் தந்தையாவார்.

தேஜஸ்வியும்...

அதே போல தேஜஸ்வி யாதவ்வும் தனது ட்விட்டர் கணக்கில் நிதீஷ் அரசை கடுமையாக சாடியுள்ளார். நேற்றிரவு ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர், சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளார். இந்த ஸ்ரீஜன் ஊழல் வழக்கு வியாபம் ஊழலை விட பரந்து விரிந்தது என்றார்.

தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் கணக்கில் பேரளவு பணம் போடப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டப் பிறகு லல்லுவும், ஷரத் யாதவும் நிதீஷ்சை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து