முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஜெயக்குமார் வசம் இருந்த சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல், பாஸ்போர்ட் துறைகள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையைக் கவனிப்பார் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க அணிகள் இணைப்பு  நடைபெற்றது.

அணிகள் இணைப்பை ஓ.பி.எஸ் அறிவித்தார். தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் அப்போது கூறினார்.

ஆவடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டு, மீண்டும் அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து