முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் தரவரிசைபட்டியல் நாளை வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் நாளை ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு  நாளை மறுநாள் முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதையேற்ற சுப்ரீம்கோர்ட், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவில்லை.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
 நீட் தேர்வு அடிப்படையில் நாளை மறுநாள்  மருத்துவ கவுன்சலிங் தொடங்க உள்ளது. ரேங்க் பட்டியல் நாளை  ( இன்று) பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து