முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை-முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கூடுதலாக மூன்று இலாகாக்கள் ஒதுக்கீடு - கவர்னர் வித்யாசாகர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மேலும் 3 இலாகாக்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின் நடைப்பெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றனர். துணை-முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்திற்கும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக பாண்டியராஜனும் நியமிக்கப்பட்டனர். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை-முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேற்று கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடமிருந்த சட்டமன்றம், தேர்தல் மற்றும் பாஸ்போர்ட் மற்றும் மேம்பாடு ஆகிய இலாகாக்கள் துணை-முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சராக ஜெயகுமார் இருப்பார் என்றும் கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து