முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசு மறுப்பு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு விசாரணை வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையின் போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்துக்கு பிரச்சனை இல்லை என்று தமிழக அரசு வக்கீல் வாதம் செய்ததாக தகவல் வெளியானது.  ஆனால் அதை தமிழக அரசு மறுத்தது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தது.

தமிழக அரசு வாதம்

இந்த நிலையில் காவிரி நீர் வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் அனுமதிக்காது என்றும் அங்கு அணை கட்டினால் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிட்டார். இந்த வழக்கு விசாரணையை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து