முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளூர் போட்டியில் 42 பந்துகளில் சதம் விளாசிய பாக். வீரர் அப்ரிடி !

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: உள்ளூர் போட்டியில் 42 பந்துகளில் அதிரடியாக அப்ரிடி சதம் விளாசியுள்ளார்.

அதிரடி ஆட்டம்...
சர்வதேச போட்டிகளில் அதிரடி மன்னனாக வலம் வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, ஓய்வு பெற்ற பிறகும் உள்ளூர் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஹம்ஷைர்  அணிக்காக விளையாடி வரும் அப்ரிடி டெர்பிஷைர்  அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 43 பந்துகளில் 101 ரன்களை குவித்துள்ளார்.

42 பந்துகளில் ...
உள்ளூர் தொடரில் ஹாம்ஷைர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 250 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெர்பிஷைர் அணி 148 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 101 ரன்கள் வித்தியாசத்தில் ஹாம்ஷைர் அணி வெற்றிபெற்றது. இந்தத் தொடரில், மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த அப்ரிடி, ரன் குவிக்கத் தடுமாறினார். இந்த நிலையில், காலிறுதிப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய அப்ரிடி 42 பந்துகளில் சதமடித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து