எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்த நாளாக விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படு கிறது. விநாயகர் முழு முதற்கடவுளாகவும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை உடனே நிறைவேற்றும் எளிமையானவராக கருதப்படுகிறார். மஞ்சள்பொடி, வெல்லம், களிமண், வெள்ளெருக்கவேர், சந்தனம் மற்றும் சாணம் முதலானவற்றில் கூட விநா யகரை உருவாக்கி பூஜைகள் செய்து விடலாம். விநாயகரை வழிபடுவது மிகவும் சுலபமானதும் அவரை திருப்திப்படுத்துவதும் மிகவும் எளிதானதாகும். தேடி வந்து வழிபட்டால் ஓடிவந்து வினைகள் தீர்ப்பார் விநாயகப் பெருமான். விநாயகரை இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, சீனா, நேபாளம், கிரேக்கம், எகிப்து, கயா, ஜாவா மற்றும் பர்மா போன்ற நாடுகளிலும் இந்திய மக்களால் வழிபாடு நடத்தப் படுகிறது.
ஒரு முறை பார்வதிதேவி குளிக்கச் செல்லும் முன் தன்னுடைய அழுக்கை ஒன்று திரட்டி ஒரு சிறுவனை படைத்து, அவனை காவலுக்கு நிறுத்தி வைத்து ஒருவரையும் உள்ளே அனுமதிக்காதே! என்று கட்டளையிட்டு குளிக்கச் சென்றா ராம். அதுசமயம் சிவபெருமான் வர, அவரை அச்சிறுவன் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டான். இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இறுதியில் சிவபெருமான் அச்சிறு வனின் தலையை துண்டித்து விட்டாராம். அந்த சமயம் அங்கு வந்த பார்வதிதேவி மிகவும் வருத்தமடைந்தார். தன்னிலிருந்து உருவான அச்சிறுவன் தன்னுடைய குழந்தை போன்றவன் என்று கூற, உடனே சிவபெருமான் அதற்கு வருந்தி அச்சிறுவனுக்கு உயிர் கொடுக்க முன்வந்தார். உடனே தனது பூத கணங்களை அழைத்து அச்சிறுவனின் தலையை தேட ஆணையிட்டார். ஆனால் அச்சிறுவனின் தலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே வடக்கு திசை நோக்கி உறங்கிக் கொண்டிருக்கும் பாலகனின் தலையை கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆனால் அந்த பாலகனின் தாய் வேறு திசை நோக்கி உறங்கியிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் பூத கணங்கள் எங்கு தேடியும் வடக்கு திசை நோக்கி யாரும் உறங்கவில்லை. ஆனால் ஒரு சிறு யானை மட்டும் வடக்கு திசை நோக்கி உறங் கிக் கொண்டிருந்தது. அதன் தாய் வேறு திசை நோக்கி உறங்கியது. இதனைக் கண்ட பூத கணங்கள் அந்த யானையின் தலையை வெட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். உடனே சிவபெருமான் அச்சிறுவனின் உடலின் மீது பொருத்தி மந்திரங்கள் ஜெபித்து உயிர் கொடுத்தார். அவ்வாறாக அச்சிறுவன் விநாயகராக பெயர் கொண்டான்.
விநாயகர் சதுர்த்தியன்று பூஜையறையில் ஒரு பலகையை வைத்து அதன் மீது கோல மிட்டு, அதன் மீது தலை வாழை இலையினை விரித்து, அதன் மேல் பச்சரியை பரப்பி, அதன் நடுவில் விநாயகரை வைப்பார்கள். விநாயகருக்கு வண்ணக்குடை அணிவித்து, எருக்கம்பூ மாலை அணிவிப்பர். அருகம்புல், மல்லி, அரளி போன்ற மலர்களைத் தூவி அர்ச்சனை செய்வர். விநாயகருக்கு விருப்பமான கொலுக்கட்டை, பொரி, அவல், சுண்டல், அப்பம், கரும்பு, கொய்யா போன்ற உண வுப் பொருட்கள் படைத்து வணங்குவர்.
விநாயகருக்கு அருகில் ஒரு சொம்பு வைத்து, அதில் மாவிலை, தேங்காய், பூ போன்றவற்றை கொண்டு கும்பம் வைப்பார்கள். பிறகு விநாயகருக்கு படையலிட்டு வணங்குவார்கள். அவருடைய மூல மந்திரத்தை 51 முறை சொல்லி வழிபடுவார்கள். அன்று முழுவதும் பகலில் விரதம் இருந்து மாலையில் சந்திரனைப் பார்த்துவிட்டு விநாயகரை வணங்குவார்கள். அப்படி செய்தால் தான் விரதம் முழுமையடையும்.
விநாயகரை மூன்று நாட்கள் வீட்டில் வைத்து வழிபட்டு பின் கடலில் சென்று கரைத்து விடுவர். இந்தியா முழுவதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. அகத்தியர், மகாமுனி காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்த போது, விநாயகப் பெருமான் மக்களுக்கு பயன்பட வேண்டிய நீரை கமண்டலத்தில் அடைத்து வைத்துள்ளதை கவனித்தார். அது சமயம் அகத்தியர் மகாமுனி கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்களை முடிக்கச் சென்ற போது, விநாயகர் அங்கே அந்தணச் சிறுவனாக தோன்றி கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். அப்போது காவேரி தரணி எங்கும் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. அதைப் பார்த்த அகத்தியருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அடைத்து வைத்த காவேரியை அச்சிறுவன் பூமியில் ஓடவிட்டு விட்டானே என்று கோபமுற்று, அச்சிறு வனை அடிக்கத் துரத்தினர். அகத்தியருக்கு அகப்படாமல் போக்கு காட்டி ஓடி விட்டு, பின்பு மாட்டிக் கொண்டான். அப்போது அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்ட முற்பட்டபோது, அவன் உடனே விநாயகனாக உருமாறினார். பின்பு அகத்தி யர் தன் தலையிலேயே கொட்டிக் கொண்டார். குட்ட நினைத்து தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகிறார். மக்களின் பயனுக்கு உள்ள காவேரியை இப்படி கமண்டலத்தில் அடைத்து வைக்கலாமா என்று விநாயகர் வினவ, அகத்தியரும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரினார்.
முன்பு ஒரு சமயம் திரிபுரர்கள் என்றழைக்கப்பட்ட மூன்று அசுரர்கள் கடும் தவம் புரிந்து பறக்கும் தன்மை கொண்ட மூன்று கோட்டைகளைப் பெற்று, தவவழிமையால் கிடைத்த அபூர்வ சக்தியால் மனச்செருக்குற்று, தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். அதுசமயம் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க மனமுவந்தார். அப்போது நான்கு வேதங்களும் புரவிகள் ஆக, சூரிய சந்திரர்கள், சக்கரங்கள் ஆக, நான்முகன் சாரதியாக, அனைத்து தேவர்களும் போர் கருவிகளாக, சிவபெருமான் திருத்தேரில் போருக்கு தயாரானார். சிவபெருமான் கட்டளைக்கு இணங்க நான்முகன் தேரை செலுத்த முற்பட்டபோது தேர் சக்கரங்களின் அச்சு முறிந்து போர் பயணம் தடைபட்டது. சிவபெருமான் புன்முறுவலுடன் விநாயகரை வணங்காமல் போருக்கு புறப்பட்ட காரணத்தை நான்முகனுக்கு உணர்த்தினார். உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விநாயகரை வணங்கி துதி பாடினர். திரிபுர சம்ஹாரம் விக்கினமின்றி நிகழ ஆசி வேண்டி நின்றனர். தன்னை வேண்டி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அருள்புரியும் விநாயகப் பெருமான் அவர்களுக்கும் தயவு கூர்ந்து ஆசி வழங்கினார்.
விநாயகருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம், வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலின் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் இருக்கும் மனத்தைப்போல், வெளியே வெறும் மாவாகச் காட்சியளித்தாலும் உள்ளேயிருக்கும் பூரணம் இனிப்பாக இருப்பதைப் போல் நம் வாழ்விலும் இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர். எவ்வாறு வெறும் அரிசி மாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.
விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவ ருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப்போதும், இல்லை தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லை பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்கு சாற்றினால் கூட போதும் அவரை மனம் குளிர செய்து விடலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள் அந்த தினங்களில் செவ்வரளி, மற்றும் மஞ்சள் அரளி மலர்களை மாலை தொடுத்து வணங்குவது மிகவும் சிறப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.