முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய 200, 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன

வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, புதிய 200, 50 ரூபாய் நோட்டுகள் டெல்லி உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளில் புழக்கத்திற்கு வந்தன. தமிழகத்தில் புதிய நோட்டுகள் கிடைப்பதற்கு ஏதவாக, 2 கண்டெய்னர் லாரிகளில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டன.

ரூ.150 கோடி ...

புதிய 200, 50 ரூபாய் நோட்டுகள் நேற்று முதல் புழக்கத்திற்கு வரும் என்று மத்திய ரிசர்வ் வங்கு ஏற்கனவே அறிவித்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 200 ரூபாய் நோட்டுக்கள், பழைய 500 ரூபாய் நோட்டு அளவுக்கு இருக்கும் இவை சந்தன கலரில் உள்ளது. புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ரூ.150 கோடி மதிப்புக்கு சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. 2 கண்டெய்னர் லாரிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன

விடுமுறை ...

அவை வங்கி பாதுகாப்பு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் புழக்கத்துக்கு விடவில்லை. வருகிற திங்கட்கிழமை (28-ம் தேதி) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் விநியோகத்துக்கு வர உள்ளது. தேவையான அளவுக்கு பணம் வராததால் உடனடியாக அனைத்து வங்கிகளிலும் கிடைக்காது. அடுத்த வாரம் மேலும் பணம் வருகிறது. அதன் பிறகு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து