முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் . வெங்கடாசலம் வழங்கினார்:

திங்கட்கிழமை, 28 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (28.08.2017) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  .ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 161 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து, 5 பயனாளிகளுக்கு ரூ.1,26,200 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
     கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து 2 பயனாளிக்கு 2017-18-ம் நிதியாண்டிற்கு ரூ.7,100 - வீதம் ரூ.14,200 - மதிப்பிலான விலையில்லா இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 நபருக்கு  ரூ.5000 - மதிப்பிலான நிதியுதவியினையும், தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தின் மூலம் 1 நபருக்கு விபத்து மரண உதவித்தொகையாக ரூ.1,02,000 - மதிப்பிலான  காசோலையினையும்,     1 நபருக்கு  மண உதவித்தொகையாக ரூ.5000 - மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.1,26,200 - மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  .ந.வெங்கடாசலம்,   வழங்கினார்.
       இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  மதி.செ.பொன்னம்மாள்  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  .தங்கவேல்  மாவட்ட வழங்கல் அலுவலர்  மதி.ரசிகலா  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  .ச.தங்கவேல்  மாவட்ட தொழிலாளர்; அலுவலர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  .ஆர்.ராஜ்குமார்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து