முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே தீப்பிடித்த எரிந்த ஆம்னி வேனால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -  திண்டுக்கல் அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அருகிலுள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் குணா. இவர் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் சாக்லேட், பிஸ்கெட் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கிராமங்களில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீரசின்னம்பட்டி பழைய தபால் நிலையம் முன்பு ஒரு கடையில் பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வேனில் இருந்து புகை வரத் தொடங்கியது. இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கவனித்து குணாவிற்கு தெரிவித்தனர். அவர் என்னவென்று பார்ப்பதற்குள் திடீரென வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
குணா இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அவர்கள் வருவதற்குள் வேன் முழுவதும் எரிந்ததுடன் வேனில் இருந்த பொருட்களும் கருகி சேதமடைந்தது. இதுகுறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் குணா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து