முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை வனத்துறையினரால் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்

செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

    ராமேசுவரம்,- ராமேசுவரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு  கடத்துவதற்காக மீனவர்களிடம் சேகரித்து பதப்படுத்திய ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டையை வனத்துறையினர் நேற்று கைப்பற்றி தப்பி ஒடிய கடத்தல்கார்ரகளை தேடி வருகின்றனர்.
    ராமேசுவரம் கடல் பகுதியில் மீனவர்கள் பிடித்து வந்த கடல் அட்டையை சேகரித்து அதை பதப்படுத்தி  இலங்கைக்கு கடத்துவதற்காக சில கடத்தல்காரர்கள் முயற்ச்சிப்பதாக விருதுநகர் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு மற்றும் வனத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.அதன் பேரில் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு மற்றும் வனத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் ஆய்வாளர் பிரதீப் தலைமையில் வனத்துறையினரும்,ராமேசுவரம் கோவில் போலீஸார்களும் ராமேசுவரம் துறைமுக கடலோரப்பகுதிகளில் முகாமிட்டு கண்காணி்தது வந்தனர்.அப்போது ராமேசுவரம் எம்.ஆர்.டி நகர் பகுதியில் தனியார் தென்னம் தோப்பில் கடல் அட்டையை  பதப்படுத்தி வந்தது தெரியவந்தது. அதன் பின்னர் அப்பகுதிக்கு சென்ற வனத்துறை யினரும்,போலீஸார்களும் பதப்படுத்திய கடல் அட்டையை கைப்பற்றினர்.இந்நிலையில் வனத்துறையினரும்,போலீஸாரும் வருவதை அறிந்த அப்பகுதியிலிருந்த கடத்தல்காரர்கள் அப்பகுதியிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து கடல் அட்டையை மதிப்பீடு செய்ததில் 79 கிலோ எனவும்,இதன் மதிப்பு சுமார் ரூ. 4 லட்சம் வரை இருக்கும் எனவும் தெரியவந்தது. அதன் பின்னர் கடல் அட்டையை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர்.அங்கு  மண்டபம் வனத்துறையினர் வழக்கு பதிந்து இது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து