முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டண கழிப்பறையினை மூடி சீல் வைக்க ஆணையாளர் அனீஷ் சேகர் உத்தரவு

வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2, 3 மற்றும் 4 ஆகிய மண்டலப் பகுதிகளில் துப்புரவுப் பணி நடைபெற்று வருவதை ஆணையாளர்  அனீஷ் சேகர்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 புதூர், மூன்று மாவடி, சூர்யா நகர், ஊமச்சிக்குளம், நாகனாகுளம், கே.கே.நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும், மண்டலம் எண்.3 மாரியம்மன் தெப்பக்குளம், காமராசர் சாலை, விளக்குத்தூண் ஆகிய பகுதிகளிலும், மண்டலம் எண்.4 தெற்கு ஆவணி மூல வீதி, கீழ ஆவணி மூல வீதி மற்றும் நான்கு சித்திரை வீதிகள் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வந்த துப்புரவு பணிகளை ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சித்திரை வீதிகளில் நவீன கழிப்பறை (நு-வழடைநவ) அமைப்பது தொடர்பாக இடங்களை ஆய்வு செய்தார். அப்போது கீழ சித்திரை வீதியில் உள்ள கட்டண கழிப்பறையில் ஆய்வு மேற்கொண்ட போது மாநகராட்சியால் வழங்கப்பட்ட கட்டண விபரங்கள் அடங்கிய பதாகையை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காத காரணத்தினாலும், மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்த காரணத்தினாலும் உடனடியாக அந்த கழிப்பறையினை பூட்டி சீல் வைத்து மறு ஏலத்திற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 க்கு உட்பட்ட மேல வெளி வீதி இராணி மங்கம்மாள் சத்திரம் எதிர்புறம், கட்டபொம்மன் சிலை எதிர்புறம், மேல ஆவணி மூல வீதி – மேல கோபுரத் தெரு சந்திப்பு, ஜான்சிராணி பூங்கா பேருந்து நிறுத்தம், தெற்கு சித்திரை வீதி, மேல சித்திரை வீதி, மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்துமிடம், கீழ ஆவணி மூல வீதி குன்னத்தூர் சத்திரம் அருகில்,  லை நாயக்கர் மகால் ஆகிய 9 இடங்களில் 22 நவீன கழிப்பறைகள் (நு-வழடைநவ) அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆய்வின்போது உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், செயற்பொறியாளர்  சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார அலுவலர்  ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர்  வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து