முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் குருபெயர்ச்சி விழா துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

சனிக்கிழமை, 2 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி- குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு நேற்று காலை 9.31 மணிக்கு பெயர்ச்சியானார். பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு காலையில் ஸ்ரீமஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவை திருப்பரங்குன்றம் சிவானந்த பட்டர் நடத்தி வைத்தார். இவ்விழாவை தொடர்ந்து சிறப்பு அர்ச்சனைக்கு பெயர் பதிவு செய்த பக்தர்களுக்கு பிரசாதபை வழங்கப்பட்டது. இவ்விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், கடமலை மயிலை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் முறுக்கோடை ராமர், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா,  பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லமுத்து, முன்னாள் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் ஒ.ராஜா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், குரு தட்ஷிணாமூர்த்தி சேவா சங்க கௌரவ ஆலோசகர் சி.சரவணன், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் அன்பு, விசக்குட்டி சேகர்,  முன்னாள் தாமரைக்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் சந்தோஷம், கள்ளிப்பட்டி மாங்காய்முத்து, அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகுருதட்ஷிணாமூர்;த்தி சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து