முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: 'பெப்சி' போராட்டம் வாபஸ்

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை : தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் பெப்சி தொழிலாளர்களின் நேற்றைய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி ஊழியர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து பெப்சி ஊழியர்கள் இல்லாமல், வேறு ஊழியர்களை வைத்தும் படப்பிடிப்புகளை தொடரலாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெப்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், நீண்ட நாட்களாக பெப்சி நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. நிரந்தர தீர்வு ஏற்படாததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெப்சி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்‌தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் பெப்சி ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில், சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பெப்சி ஊழியர்களின் நேற்றைய போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து