முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கு செப். 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில்  நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில் கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதிடும்போது, “காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் கர்நாடக அரசின் வாதத்தை மறுத்து வாதிட அனுமதி வழங்க வேண்டும். தமிழக அரசு கூடுதல் வாதத்தை முன்வைக்க மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்க வேண்டும்”என கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “இவ்வழக்கு வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அப்போது தமிழக அரசு கூடுதலாக ஒரு மணி நேரம், இறுதி வாதத்தை முன் வைக்கலாம். அதன்பிறகு புதுவை அரசு தங்கள் தரப்பு இறுதி முன் வைக்கலாம்” எனக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து