எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ் வளர்ச்சிக் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா நேற்று பல்கலைக்கழக லெ.சித.லெ. பழநியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இக்கருத்தரங்தைத் துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில், தமிழ் பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடக்கமே இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நோக்கமாகும் .மொழி இனத்தின் அடையாளம். ஓர் இனத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும் தெரிந்து கொள்வதற்கு மொழி அவசியம். அத்தகைய மொழியை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கில் தான் அழகப்பாபல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மையமும் தமிழ் பண்பாட்டு காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மோழியை பணம் சம்பாதிக்கும் கருவியாக கருதக்கூடாது. தாய்மொழி ஒரு கருவியல்ல. ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாணவர்கள் ஆரம்ப கல்வி கற்கத் தொடங்கும் போது, அவர்களுக்கு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், விழுமியங்களையும் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். எனவே, பள்ளி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து இக்கருத்தரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் திரு. அன்பரசு இராஜேந்திரன், தமது சிறப்புரையில், அழகப்பாபல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அழகப்பர் அருங்காட்சியகமும், பண்பாட்டு காட்சியகமும் மிகச் சிறந்தமரபுடைமை நிலையம் எனப் பாராட்டினார். மேலும், நாம் நமது வேர்களை மறந்து விடக்கூடாது. உலகமயமாதல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது போல நமது வாழ்க்கையும் சுருங்கிவிட்டது. நாம் நமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பகிர்ந்துக் கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மொழியை வாழும் மொழியாககற்பிக்கவேண்டும். நம் மொழியை இலகுவாகவும்,பயன்படுத்தும்;விதமாகவும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் மொழியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் செயலை நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழிநிலைய பாடத்துறைத் தலைவர் முனைவர் இரா. விமலன் தமது வாழ்த்துரையில், நம் முன்னோர்கள் நமது பண்பாட்டைகாரண காரியத்தோடு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆதனை உணர்ந்து அவற்றை பின்பற்ற வேண்டும். கணினிசார்ந்த பயணத்தை நாம் மேற்கொண்டால் தான் நாம் நம் மொழியை வளர்க்க முடியும். தொழில்நுட்பத்தோடு நாம் நம் மொழியை கைகோர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேனாள் சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர். தங்கம் மூர்த்தி, தமது வாழ்த்துரையில், தமிழ் மொழிபாரம்பரியம்மிக்க மொழி. ஆதை பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஒருவருக்கு தாயும், தமிழ் ஆசிரியரும் சிறப்பாக அமைந்து விட்டால், அதுவே அவருக்கு பெரிய வரமாகும். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியை அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் சிறப்பாக செய்து வருகிறது எனபாராட்டினார். 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடத்துவது மிகவும் பொருத்தமானது. தமிழின் போக்கு சிறப்பாக அமைந்தால் தான் தமிழ் வளர்ச்சி பெறும் என்றார்.
சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழிநிலைய ஆசிரியர் முனைவர் கோ. சந்தன்ராஜ் மற்றும் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் திரு. சு. நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்க ஆய்வுக்கோவையை திரு. அன்பரசு இராஜேந்திரன் அவர்கள் வெளியிட துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன், வரவேற்புரையாற்றினார். தமிழ்ப் பண்பாட்டுமைய இயக்குநர் பேரா. சே. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.