முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

8.1 ரிக்டர் அளவில்...
மெக்சிகோ நாட்டில் தென்கடலோர பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்பாக பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியது. இந்த நில நடுக்கம், சியாபாஸ் மாகாணத்தில் பிஜிஜியாபான் நகரில் இருந்து 54 மைல்கள் தொலைவில், பசிபிக் பகுதியில் 43 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மெக்சிகோ சிட்டியில்...
இந்த நில நடுக்கம், மெக்சிகோ சிட்டியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோ நகர விமான நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் தூள், தூளாயின. தலைநகரையொட்டிய பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கின.தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து அலறியடித்தவாறு எழுந்து, வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் வந்து தஞ்சம் புகுந்தனர்.

இதுவே முதல்முறை
ஓக்சாகா மாகாணத்தின் பல பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின. மெக்சிகோவில் 1985-ம் ஆண்டுக்கு பின்னர் இப்படி ஒரு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது இதுவே முதல்முறை.நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புகள் ஏற்பட்டதால் மெக்சிகோ சிட்டி, சியாபாஸ், ஹிடால்கோ, வெராகுரூஸ், குயர்ரெரோ, டபாஸ்கோ, ஓக்சாகா, பியூப்லா, டிலாக்ஸ்கலா பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து