எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நதிகளை இணைக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் மறைந்த முதல்வர் அம்மா ( ஜெயலலிதா) என்று சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
சென்னையில் ‘நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
நம் நாட்டின் நதிகள் மீட்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் ‘நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்’ என்ற இயக்கம் தேசிய இயக்கமாக சத்குரு தலைமையில்கோயம்புத்தூர் முதல் புது டெல்லி வரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் இச்சீர்மிகு விழாவில் உங்களுடன் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமான மரங்களை நடுவதன் மூலம் நதிகளைப் பாதுகாப்பது, போன்ற பல்வேறு இயற்கையைப் பேணிக் காக்கும் நிகழ்வுகள் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். இதனால், அவர் நதிகளை இணைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வந்தார். அதேபோன்று, மாநில நதிகளை தேசிய மயமாக்கி, நதிகளின் நீர் ஆதாரத்தை உகந்த வகையில் உபயோகப்படுத்தப் பட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கோரிவந்தார். நதிகள் இணைப்பிற்காக நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில், உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்புதிட்டம் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 34 ஆறுகள், 89 அணைகள் மற்றும் 14,098 பெரியஏரிகள் பொதுப்பணித் துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வளத்தினை பாதுகாக்கும்அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். நீர்வளஆதாரங்களை சீரிய முறையில் மேம்படுத்துவதற்கான முக்கியமுயற்சியாக ‘குடிமராமத்து’ முறைக்குப் புத்துயிரூட்டி பங்கேற்பு அணுகுமுறையடன் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன. 2016-2017 ஆம் ஆண்டில்1,519 பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கப்பட்டுள்ளன.
2017-2018 ஆம் ஆண்டு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2,065பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும், ஒரு சிறப்பு முயற்சியாக ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளைமண்ணை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம்செய்பவர்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகள் தற்பொழுது செயலாக்கத்தில் உள்ளன. மேலும் மாநிலத்திலுள்ள அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் படிவுகளை அகற்றி, அணைகளின் திட்டமிடப்பட்ட கொள்ளளவினை மீட்டெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நிலத்தடி நீரை செறிவூட்டவும் ஆறுகளிலிருந்து ஏரிகளுக்குத் தண்ணீரை கொண்டு செல்லவும் புதிய தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுக்கள் கட்டவும் ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் புதியதிட்டங்கள் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளன.
காவேரி ஆற்றின் கழிமுகப் பகுதிகளில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தினை தணிப்பதற்கும்,அப்பகுதிகளில் உள்ள வடிகால்களை மேம்படுத்துவதற்கும், 1,560 கோடிரூபாய் மதிப்பீட்டில், திட்டம் தற்பொழுது செயலாக்கத்தில் உள்ளது.மேலும், காவேரி வடிநிலத்தில் பாசன அமைப்புகளை 14,500 கோடிரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி, புனரமைக்கும் திட்டத்தின் கீழ்,கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு 2,298 கோடியே 75 லட்சம் ரூபாய்மதிப்பீட்டிலான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நதிகள் இணைப்பிற்காக இதுவரை நடைபெற்ற 12 கூட்டங்களில், உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு அரசுவலியுறுத்தி வருகிறது. மேலும், இதனைப் பூர்த்தி செய்யும் வகையில், கங்கை சீரமைப்பு பணியினை மேற்கொள்வதை போன்று தேசிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நதிகள் இணைப்பு திட்டங்கள்செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்,மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு -பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு இணைப்பிற்கான விரிவானதிட்ட அறிக்கை மேலும் காலதாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும்என்றும், நதிகள் இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் ஒருசட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்திற்கு துரிதமாகசெயல்திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது.
பிரதமரை 27.02.2017 அன்று நான்சந்தித்து பன்மாநில நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்றகோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். மேலும், 24.05.2017 அன்று நான் எழுதியுள்ள கடிதத்தில் பம்பா -அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டத்திற்கான இசைவினைவழங்க கேரள அரசுக்கு உரிய அறிவுரை வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில் காவேரி ஆற்றிலிருந்து தண்ணீரை வைகை மற்றும்குண்டாற்றிற்கு கொண்டு செல்ல உரிய நதிகள் இணைப்பை ஏற்படுத்தும் பொருட்டு காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் மாயனூர் என்ற இடத்தில் புதிய கதவணை 254 கோடியே 45 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் மாநில அரசின் நிதிஆதாரங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாகஇக்கதவணையின் மேற்பகுதியிலிருந்து புதிய கால்வாய் அமைத்து காவேரி ஆற்றின் வெள்ள நீரை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு,மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் மிகை நீரை காளிங்கராயன்அணைக்கட்டிலிருந்து நீரேற்று முறையில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளம்குட்டைகளை நிரப்பும் திட்டமாக அத்திகடவு – அவிநாசி திட்டம் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு,திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள30 பொதுப்பணித்துறை ஏரிகள், 41 ஒன்றிய ஏரிகள் மற்றும் 630 குளம்குட்டைகள் பயன்பெறும் .நீர்வளங்களுக்கு ஆதாரமாக உள்ள காடுகளையும், மரங்களையும்பேணிப் பாதுகாப்பதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பசுமைப் போர்வையினைமேம்படுத்தவும், மரங்களின் பயன்பாட்டினை நீட்டிக்கவும் வனங்களுக்குஉள்ளேயும், வெளியேயும், 7.55 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வனவளங்கள் பாதுகாக்கப்பட்டு, பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ளநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி 2012-13 முதல் ஒவ்வொரு ஆண்டும் மாபெரும்மரம் நடவுத் திட்டத்தின் கீழ் இதுவரை 3.99 கோடி மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டு மரங்களின் அடர்த்தியை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24-ஆம்தேதியன்று தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைவளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு 69 இலட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்ததை மகிழ்ச்சியுடன் இங்குநினைவு கூர விரும்புகிறேன்.
மேலும், காப்பு வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்களடர்ந்தபரப்பினை அதிகரித்தல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் மண் அரிப்பைதடுத்தல் ஆகியவற்றினை நோக்கங்களாகக் கொண்டு ஆற்றுப்படுகைகளில் 14,335 எக்டேர் பரப்பளவில் தேக்குமரத் தோட்டங்கள்எழுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் இயற்கையாக சந்தன மரங்கள் வளரும்மாவட்டங்களான வேலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் சந்தனமரங்களை மறுஉற்பத்தி செய்யும் திட்டம்ரூ.100.00 கோடி செலவில், 2016-17-ஆம் ஆண்டு முதல்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 12.12.2016 அன்று வார்தா புயல் காரணமாக சென்னை மாநகரம்மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியமாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடுசாய்ந்தன. இழந்த பசுமைப் போர்வையினை மீட்டெடுக்கும் பொருட்டுசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ. 13.42 கோடி செலவில் மரக்கன்றுகள்நடப்பட்டு வருகின்றது.
வனப்பகுதிகளில் உயிர்ப்பன்மையினைஅதிகரிக்கவும், வைகை மற்றும் நொய்யல் நீர்வடிப்பகுதிகளில் தொடர்நீர் வரத்தினை அதிகரிக்கவும் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் வைகைமற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் ஊட்டுதல் எனும் புதிய திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் தமிழகஅரசின் சீரிய கவனத்தில் உள்ளது என்பதைத் தெரிவித்து மேலும்,மரியாதைக்குரிய ஈஷா யோகா மையத்தை சார்ந்த சத்குருவின் நதிகளை மீட்போம் என்ற இயக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுமிகவும் பாராட்டுக்குரியதாகும். நீர் மிக மிக இன்றியமையாதது.மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்திற்கும் நீரின்தேவை மிக முக்கியமானதாகும். அரசு புறம்போக்கு நிலங்களில் எங்கெங்கே இந்த ஈஷா யோகா மையத்தை சார்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட முன்வந்தால், அதற்கான அனைத்து உதவிகளையும்இந்த அரசு செய்யும். .சத்குரு எந்த நோக்கத்திற்காகஇந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அந்த இயக்கம் வெற்றி பெற நாம்அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.