முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மணிகண்டன் குழந்தைகளுக்கு காதணிவிழா

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
      தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் டாக்டர் வசந்தி ஆகியோரின் குழந்தைகள் லீலாம்பிகை, லெனிஷா, கிளிண்டன் செல்லத்துரை ஆகியோருக்கு காதணி விழா ராமநாதபுரம் அருகே உள்ள சித்தூரில் அமைந்துள்ள சாத்தாருடைய அய்யனார்-செல்லி அம்மன் கோவிலில் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் நல்லாசியுடன் அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் தந்தையும் ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவருமான செ.முருகேசன், தாயார் அன்னக்கிளி நாச்சியார் ஆகியோரின் முன்னிலையில் இந்த காதணி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் பாஸ்கரன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் செவ்வூர் ராமச்சந்திரன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், அன்வர்ராஜா ஆகியோரும், கலெக்டர் முனைவர் நடராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் குழந்தைகளை வாழ்த்தினர்.
    இந்த விழாவில், ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், ஒன்றிய, நகர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், ராமநாதபுரம் மாவட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர், நகர் நல அமைப்பை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வாழ்த்தினர். விழாவில் கலந்து கொண்டவர்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், டாக்டர் வசந்தி, மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன், அன்னக்கிளி நாச்சியார் ஆகியோர் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து