எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியான்மர்: மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்போருக்கு உதவும் வகையில், சண்டையை நிறுத்திக் கொள்வதாக ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் நேற்று அறிவித்தனர். இதுபோல அரசும் சண்டையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராடி வரும் ‘ஆரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி’ தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், ராணுவத்துக்கு எதிரான சண்டையை ஒரு மாதத்துக்கு நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம். அதேபோல, மியான்மர் அரசும் எங்களுக்கு எதிரான சண்டையை நிறுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. பல தலைமுறைகளாக வசித்து வரும் அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் அரசு பாகுபாடு காட்டுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
இதனிடையே அந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள புத்த மதத்தினர், ராணுவத்தின் உதவியுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அடக்குமுறையை கையாண்டு வந்தனர். இதையடுத்து, முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக ‘தி ஆரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி’ என்ற போராளிகள் குழு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பினர் முதல் முறையாக ராணுவத்துக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் பயங்கர மோதல் வெடித்ததில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி போராளிகள் குழுவினர் ராணுவத்துக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பழிவாங்கும் வகையில் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் வன்முறைக்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர். இதில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகள் என மியான்மர் அரசு கூறுகிறது.
கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வங்கதேசத்தின் காக்ஸ் பாஜர் பகுதியில் அகதிகளாக குடியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அகதிகள் வந்து கொண்டே இருப்பதால் தங்க இடமின்றி திறந்தவெளியிலும், சாலையோரமும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகதிகள் வருகை தொடர்கதையாக இருப்பதால் குடிநீர், உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அங்கு முகாமிட்டுள்ள ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தங்களால் முடிந்தவரை குடிநீர், உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் பசி, பட்டினியால் வாடுகின்றனர். அப்பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களிடம் தங்களது வயிற்றைத் தட்டி பசியால் வாடுவதாக தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சுகாதார வசதி இல்லாததால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் சண்டையை நிறுத்திக் கொள்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.