எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்து வழக்கை வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பகலில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தனர்.
அனைவருக்கும் அழைப்பு
அ.தி.மு.க பொதுக்குழு செப். 12-ம் தேதி நடைபெறும் என்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைப்பெற்று வந்தன. பொதுக்குழு உறுப்பினர்களும் சென்னைக்கு பயணமானார்கள்.
ஐகோர்ட்டில் வழக்கு
இதனிடையே, அ தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், கடந்த 28.8.2017 அன்று பொதுக்குழு தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் அ தி.மு.க (அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா) என்று அணிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த அந்த கடிதத்தில், பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யார் என்று குறிப்பிடாமல் நிர்வாகி என்று தெரிவித்துள்ளனர். அதேபோல தற்போது பொதுச்செயலாளர் இல்லாத பட்சத்தில் துணை பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தில் அ தி.மு.க யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பொதுக்குழு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. யாருக்கு என்ற விவகாரம் நிலுவையில் உள்ளபோது பொதுக்குழு கூட்டுவது சட்ட விரோதம். எனவே பொதுகுழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என வெற்றிவேல் எம்.எல்.ஏ அதில் கோரியிருந்தார். அவர் மனு மீதான விசாரணை 11ம் தேதி நடைபெறும் என்று ஐகோர்ட் அறிவித்தது.
ஒருவர் மட்டும் வந்தது ஏன்?
அதன்படி நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஏன் ஒரே ஒருவர் மட்டும் தடைகேட்டு வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அக்கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தடைகேட்டு அவர் வந்துள்ளார் எனக் கூறினார். அப்போது நீதிபதி, உங்கள் அணியும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாமே எனக்கேட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் இந்த கூட்டம் விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர். அதற்கு நீதிபதி, அப்படி அனுப்பப்பட்ட கடிதம் விதிகளுக்கு எதிரானது என்றால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாமே? என மீண்டும் கேட்டார்.
மேலும், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நீங்கள் அதை நிராகரித்துவிட்டு வீட்டில் இருக்கலாமே என்றும் கருத்து தெரிவித்தார். இதுபோல சட்டமன்ற உறுப்பினர் வழக்கு தொடர வேண்டும் என்றால், அது முதலில் தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் அதை இந்த வழக்கில் கடைபிடிக்காமல், பொதுக்குழுவுக்கு தடை கோரி தனிப்பட்ட முறையிலேயே வெற்றிவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கண்டனத்துக்குரியது
அதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்படக்கூடிய மனுதாரர், தினகரனையே 4-வது எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். தனக்கு ஆதரவாக உள்ளவர்களை இதுபோல் எதிர்மனுதாரராக சேர்த்து விடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று செய்வது வழக்கு, விசாரணையின் முக்கிய கட்டத்தை எட்டும்போது அதை திசை திருப்பும் நோக்கமாகும். இந்த செயல் கண்டனத்துக்குரியது, இதுபோன்று உள்நோக்கம் கொண்ட செயல்களை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் நீதிபதி கூறினார்.
ரூ.1 லட்சம் அபராதம்
பின்னர் நீதிபதி, வெற்றிவேலுக்கு மூன்று வாய்ப்புக்களை வழங்கினார். வெற்றிவேல் விருப்பப்பட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் அவருக்கு விருப்பம் இருந்தால் மதியம் சென்று உணவருந்திவிட்டு வரலாம் அதேபோல கூட்டத்துக்கு செல்ல விருப்பமில்லாவிட்டால் அவர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, வீட்டிலேயே இருக்கலாம் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக வழக்கை தொடுத்த வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக சட்டப்படியான சுதந்திரம் உள்ளது எனவும் உத்தரவில் தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனு
இந்நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் எம்.எல்.ஏ நேற்றைய தினமே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரியும் தலைமை நீதிபதி அமர்வில் வெற்றிவேல் எம்.எல்.ஏ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் சக்தர், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
தடையில்லை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்க மறுத்துவிட்டனர். பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். சிலர் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அ.தி.மு.க.வினர் மும்முரமாக ஈடுபட தொடங்கிவிட்டனர். இதையொட்டி சென்னை வானகரம் பகுதி கலைகட்டியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி