எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்து வழக்கை வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பகலில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தனர்.
அனைவருக்கும் அழைப்பு
அ.தி.மு.க பொதுக்குழு செப். 12-ம் தேதி நடைபெறும் என்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைப்பெற்று வந்தன. பொதுக்குழு உறுப்பினர்களும் சென்னைக்கு பயணமானார்கள்.
ஐகோர்ட்டில் வழக்கு
இதனிடையே, அ தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், கடந்த 28.8.2017 அன்று பொதுக்குழு தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் அ தி.மு.க (அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா) என்று அணிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த அந்த கடிதத்தில், பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யார் என்று குறிப்பிடாமல் நிர்வாகி என்று தெரிவித்துள்ளனர். அதேபோல தற்போது பொதுச்செயலாளர் இல்லாத பட்சத்தில் துணை பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தில் அ தி.மு.க யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பொதுக்குழு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. யாருக்கு என்ற விவகாரம் நிலுவையில் உள்ளபோது பொதுக்குழு கூட்டுவது சட்ட விரோதம். எனவே பொதுகுழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என வெற்றிவேல் எம்.எல்.ஏ அதில் கோரியிருந்தார். அவர் மனு மீதான விசாரணை 11ம் தேதி நடைபெறும் என்று ஐகோர்ட் அறிவித்தது.
ஒருவர் மட்டும் வந்தது ஏன்?
அதன்படி நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஏன் ஒரே ஒருவர் மட்டும் தடைகேட்டு வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அக்கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தடைகேட்டு அவர் வந்துள்ளார் எனக் கூறினார். அப்போது நீதிபதி, உங்கள் அணியும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாமே எனக்கேட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் இந்த கூட்டம் விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர். அதற்கு நீதிபதி, அப்படி அனுப்பப்பட்ட கடிதம் விதிகளுக்கு எதிரானது என்றால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாமே? என மீண்டும் கேட்டார்.
மேலும், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நீங்கள் அதை நிராகரித்துவிட்டு வீட்டில் இருக்கலாமே என்றும் கருத்து தெரிவித்தார். இதுபோல சட்டமன்ற உறுப்பினர் வழக்கு தொடர வேண்டும் என்றால், அது முதலில் தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் அதை இந்த வழக்கில் கடைபிடிக்காமல், பொதுக்குழுவுக்கு தடை கோரி தனிப்பட்ட முறையிலேயே வெற்றிவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கண்டனத்துக்குரியது
அதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்படக்கூடிய மனுதாரர், தினகரனையே 4-வது எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். தனக்கு ஆதரவாக உள்ளவர்களை இதுபோல் எதிர்மனுதாரராக சேர்த்து விடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று செய்வது வழக்கு, விசாரணையின் முக்கிய கட்டத்தை எட்டும்போது அதை திசை திருப்பும் நோக்கமாகும். இந்த செயல் கண்டனத்துக்குரியது, இதுபோன்று உள்நோக்கம் கொண்ட செயல்களை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் நீதிபதி கூறினார்.
ரூ.1 லட்சம் அபராதம்
பின்னர் நீதிபதி, வெற்றிவேலுக்கு மூன்று வாய்ப்புக்களை வழங்கினார். வெற்றிவேல் விருப்பப்பட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் அவருக்கு விருப்பம் இருந்தால் மதியம் சென்று உணவருந்திவிட்டு வரலாம் அதேபோல கூட்டத்துக்கு செல்ல விருப்பமில்லாவிட்டால் அவர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, வீட்டிலேயே இருக்கலாம் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக வழக்கை தொடுத்த வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக சட்டப்படியான சுதந்திரம் உள்ளது எனவும் உத்தரவில் தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனு
இந்நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் எம்.எல்.ஏ நேற்றைய தினமே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரியும் தலைமை நீதிபதி அமர்வில் வெற்றிவேல் எம்.எல்.ஏ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் சக்தர், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
தடையில்லை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்க மறுத்துவிட்டனர். பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். சிலர் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அ.தி.மு.க.வினர் மும்முரமாக ஈடுபட தொடங்கிவிட்டனர். இதையொட்டி சென்னை வானகரம் பகுதி கலைகட்டியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.