எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க.வில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர். இனி பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் அ.தி.மு.க பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் கட்சியில் சேர்த்தல்-நீக்கல் அதிகாரம் வழங்கி கட்சியின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, அவரால் 30.12.2016 அன்று முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது மற்றும் தினகரனின் நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுக் கூட்டம்
அ.தி.மு.க (அம்மா), அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா ஆகிய அணிகளின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு:-
கட்சி பணிகளுக்கு வருவதற்கு முன்னரே நாடு போற்றும் புகழ் பெற்றிருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தனது புகழை கட்சிக்கு அர்ப்பணித்து அதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெற பல ஆண்டுகள் பணியாற்றியவர். எனவேதான், அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என அழைத்தோம். தந்தை பெரியாரை தலைவராக ஏற்று பொதுவாழ்வில் நடைபோட்ட அண்ணா தான் உருவாக்கிய கட்சிக்கு தலைவர் என்று யாரையும் குறிப்பிடாமல் அந்த தகுதி தந்தை பெரியாருக்கு மட்டுமே உரியது என வாழ்ந்தார்.
அண்ணா தனது தலைவராம், தந்தை பெரியார் மீது கொண்டிருந்த மரியாதையை பின்பற்றும் அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்பதை நிலைநாட்டவும், அவர்களின் வாழ்வைப் போற்றவும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பெருமை மறைந்த ஜெயலலிதாவிற்கு மட்டுமே உரியது.
பொதுச்செயலாளர் இனி இல்லை
எனவே, அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த இரு பெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது என்ற காரணத்தால், இனி அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு இல்லை என்று முடிவெடுத்து அந்தப் பதவியை ரத்து செய்கிறோம். அதற்கு ஏற்ப, அ.தி.மு.க.வின் சட்டதிட்ட விதி எண்.43 திருத்தம் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தங்களை பொதுக்குழு ஏகமனதாக ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.
சசிகலா நியமனம் ரத்து
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாருமான வைத்திலிங்கம் எம்.பி. முன்மொழிந்த தீர்மானத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தந்த அதிர்ச்சியும், கவலையும் நிறைந்த சூழ்நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, சசிகலா 30.12.2016 அன்று முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது.
அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொதுக்குழு கூட்டங்களில் உரையாற்றிய போது கட்சியை கட்டிக் காக்கவும், கட்சியை அபகரிக்க சிலர் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் தான் படுகின்ற துன்பங்களையும், எதிர்கொள்ளும் வேதனைகளையும் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார்.
அறிவிப்புகள் செல்லாது
அ.தி.மு.க. தொண்டர்களின் இயக்கமாகவும், மக்களுக்குத் தொண்டாற்றும் இயக்கமாகவும் திகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் நிர்வாக அமைப்பினை சீர்குலைக்கும் நோக்கிலும் அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி நியமனம் செய்யப்படாதவரும், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவருமான டி.டி.வி.தினகரன் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதிதாக நியமிப்பது குறித்து வெளியிடும் எந்த ஓர் அறிவிப்பும் செல்லத்தக்கதல்ல. அவை கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டது இல்லை என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய காலத்திற்குப் பிறகும் கட்சி நூறாண்டுகளுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சூளூரைத்தார். வாரிசு அரசியலுக்கு இடம் தராமல் ஜனநாயக இயக்கமாக அ.தி.மு.க. இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். இதனை கட்சியின் பொதுக்குழு கூட்டங்களிலும், சட்டமன்றத்திலும் பலமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
2 முக்கிய பொறுப்புகள்
அ.தி.மு.க.வை வழி நடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை உருவாக்கப்படுகிறது.
கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால், கட்சியின் அமைப்புத் தேர்தல் மூலம், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையினை பெற்று பல ஆண்டுகள் கட்சிப் பணியாற்றி வந்திருக்கும் கட்சியின் முன்னோடிகளான பொருளாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
கட்சியின் பொதுச் செயலாளருக்கு கட்சியின் சட்ட திட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முழுமையாகப் பெற்று கட்சியை வழிநடத்துவர். இரண்டு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படவும், அவற்றில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கட்சியின் வழிகாட்டுக்குழு ஒன்று அமைக்கப்படுகிறது.
அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும் அதிகாரங்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக வழங்கப்படுகிறது.
இருவரும் கையெழுத்திட்டு...
தேர்தல் ஆணையத்திற்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளுக்கும், அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட வேண்டிய படிவம் ஏ, படிவம் பி உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும் மற்றும் கட்சி தொடர்புடைய அனைத்து அறிவிப்புகளிலும், நியமனங்களிலும் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளிலும், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து, இருவரும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள்
முன்னதாக அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இரு கூட்டங்களிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உருவப்படத்திற்கு அமைச்சர்கள் கட்சியின் நிர்வாகிகள் மலர்களை தூவி மரியாதை செய்தனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தையொட்டி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வானகரம் கல்யாண மண்டபம் வரை அ.தி.மு.க பேனர்கள், கொடிகள் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக்குழுவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பொதுக்குழு முடிந்து இருவரும் புறப்பட்ட போது அ.தி.மு.க தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் வழியனுப்பிவைத்தனர்.
தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்
* இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என முதல் தீர்மானம் நிறைவேற்றம்.
* அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்ததற்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டி தீர்மானம்.
* வார்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.
* ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
* தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றம்.
* யார் யார் என்ன என்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அதில் தொடர்வார்கள்.
* அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டதிருத்தம் கொண்டு வரப்படும்.
*வழிகாட்டு குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓ. பன்னீர் செல்வமும், ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்கள்.
* ஒருவரை கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் பொதுக்கூழுவில் ஒப்புதல்.
*கட்சி விதியில் சட்டதிருத்தம் கொண்டு வர ஈபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கட்சி விதி எண் 19-ல் திருத்தத்தம் செய்ய ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*துணை ஒருங்கிணைப்பாளர்களாக வைத்தியலிங்கம், கே.பி முனுசாமி நியமனம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.