எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க.வில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர். இனி பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் அ.தி.மு.க பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் கட்சியில் சேர்த்தல்-நீக்கல் அதிகாரம் வழங்கி கட்சியின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, அவரால் 30.12.2016 அன்று முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது மற்றும் தினகரனின் நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுக் கூட்டம்
அ.தி.மு.க (அம்மா), அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா ஆகிய அணிகளின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு:-
கட்சி பணிகளுக்கு வருவதற்கு முன்னரே நாடு போற்றும் புகழ் பெற்றிருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தனது புகழை கட்சிக்கு அர்ப்பணித்து அதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெற பல ஆண்டுகள் பணியாற்றியவர். எனவேதான், அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என அழைத்தோம். தந்தை பெரியாரை தலைவராக ஏற்று பொதுவாழ்வில் நடைபோட்ட அண்ணா தான் உருவாக்கிய கட்சிக்கு தலைவர் என்று யாரையும் குறிப்பிடாமல் அந்த தகுதி தந்தை பெரியாருக்கு மட்டுமே உரியது என வாழ்ந்தார்.
அண்ணா தனது தலைவராம், தந்தை பெரியார் மீது கொண்டிருந்த மரியாதையை பின்பற்றும் அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்பதை நிலைநாட்டவும், அவர்களின் வாழ்வைப் போற்றவும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பெருமை மறைந்த ஜெயலலிதாவிற்கு மட்டுமே உரியது.
பொதுச்செயலாளர் இனி இல்லை
எனவே, அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த இரு பெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது என்ற காரணத்தால், இனி அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு இல்லை என்று முடிவெடுத்து அந்தப் பதவியை ரத்து செய்கிறோம். அதற்கு ஏற்ப, அ.தி.மு.க.வின் சட்டதிட்ட விதி எண்.43 திருத்தம் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தங்களை பொதுக்குழு ஏகமனதாக ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.
சசிகலா நியமனம் ரத்து
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாருமான வைத்திலிங்கம் எம்.பி. முன்மொழிந்த தீர்மானத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தந்த அதிர்ச்சியும், கவலையும் நிறைந்த சூழ்நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, சசிகலா 30.12.2016 அன்று முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது.
அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொதுக்குழு கூட்டங்களில் உரையாற்றிய போது கட்சியை கட்டிக் காக்கவும், கட்சியை அபகரிக்க சிலர் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் தான் படுகின்ற துன்பங்களையும், எதிர்கொள்ளும் வேதனைகளையும் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார்.
அறிவிப்புகள் செல்லாது
அ.தி.மு.க. தொண்டர்களின் இயக்கமாகவும், மக்களுக்குத் தொண்டாற்றும் இயக்கமாகவும் திகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் நிர்வாக அமைப்பினை சீர்குலைக்கும் நோக்கிலும் அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி நியமனம் செய்யப்படாதவரும், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவருமான டி.டி.வி.தினகரன் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதிதாக நியமிப்பது குறித்து வெளியிடும் எந்த ஓர் அறிவிப்பும் செல்லத்தக்கதல்ல. அவை கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டது இல்லை என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய காலத்திற்குப் பிறகும் கட்சி நூறாண்டுகளுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சூளூரைத்தார். வாரிசு அரசியலுக்கு இடம் தராமல் ஜனநாயக இயக்கமாக அ.தி.மு.க. இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். இதனை கட்சியின் பொதுக்குழு கூட்டங்களிலும், சட்டமன்றத்திலும் பலமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
2 முக்கிய பொறுப்புகள்
அ.தி.மு.க.வை வழி நடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை உருவாக்கப்படுகிறது.
கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால், கட்சியின் அமைப்புத் தேர்தல் மூலம், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையினை பெற்று பல ஆண்டுகள் கட்சிப் பணியாற்றி வந்திருக்கும் கட்சியின் முன்னோடிகளான பொருளாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
கட்சியின் பொதுச் செயலாளருக்கு கட்சியின் சட்ட திட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முழுமையாகப் பெற்று கட்சியை வழிநடத்துவர். இரண்டு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படவும், அவற்றில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கட்சியின் வழிகாட்டுக்குழு ஒன்று அமைக்கப்படுகிறது.
அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும் அதிகாரங்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக வழங்கப்படுகிறது.
இருவரும் கையெழுத்திட்டு...
தேர்தல் ஆணையத்திற்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளுக்கும், அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட வேண்டிய படிவம் ஏ, படிவம் பி உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும் மற்றும் கட்சி தொடர்புடைய அனைத்து அறிவிப்புகளிலும், நியமனங்களிலும் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளிலும், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து, இருவரும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள்
முன்னதாக அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இரு கூட்டங்களிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உருவப்படத்திற்கு அமைச்சர்கள் கட்சியின் நிர்வாகிகள் மலர்களை தூவி மரியாதை செய்தனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தையொட்டி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வானகரம் கல்யாண மண்டபம் வரை அ.தி.மு.க பேனர்கள், கொடிகள் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக்குழுவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பொதுக்குழு முடிந்து இருவரும் புறப்பட்ட போது அ.தி.மு.க தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் வழியனுப்பிவைத்தனர்.
தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்
* இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என முதல் தீர்மானம் நிறைவேற்றம்.
* அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்ததற்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டி தீர்மானம்.
* வார்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.
* ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
* தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றம்.
* யார் யார் என்ன என்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அதில் தொடர்வார்கள்.
* அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டதிருத்தம் கொண்டு வரப்படும்.
*வழிகாட்டு குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓ. பன்னீர் செல்வமும், ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்கள்.
* ஒருவரை கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் பொதுக்கூழுவில் ஒப்புதல்.
*கட்சி விதியில் சட்டதிருத்தம் கொண்டு வர ஈபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கட்சி விதி எண் 19-ல் திருத்தத்தம் செய்ய ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*துணை ஒருங்கிணைப்பாளர்களாக வைத்தியலிங்கம், கே.பி முனுசாமி நியமனம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.