எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது என்று அ.தி.மு.க பொது்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
வெற்றி கிடைத்திருக்கின்றது
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா ? நடைபெறாது என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். ஜெயலலிதாவின் ஆத்மா இந்த பொதுக்குழுக்கூட்டம் நடைபெற வேண்டும் என்று நீதியை நீதிமன்றம் மூலமாக பெற்று, உண்மையான அ.தி.மு.க விசுவாசம் மிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் தான் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவார்கள் என்று நீதிமன்றமே நமக்கு நீதி வழங்கியிருக்கிறது. ஆகவே, நீதிமன்றம் மூலமாக நீதி கிடைத்திருக்கிறது. ஆகவே, முதல் வெற்றி நமக்கு இன்று கிடைத்திருக்கின்றது. பிரிந்த இயக்கம் ஒன்றாக இணைந்த வரலாறு இந்தியாவிலேயே ஒரு சில இயக்கங்களுக்குத் தான் பொருந்தும்.
அற்புதமான ஆட்சி
எம்.ஜி.ஆர். மறைந்தபொழுது, ஜெயலலிதா பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை 1991-லே அமைத்த பெருமை ஜெயலலிதாவை சாரும். ஆகவே, இந்தக் கட்சிக்கு வரலாறு இருக்கின்றது. எவராக இருந்தாலும், கட்சியை உடைக்கவோ, மாற்றவோ முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அம்மா மறைந்துவிட்டார். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம், ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்றெல்லாம் நினைத்தார்கள். தி.மு.க எவ்வளவோ பிரச்னையை தூண்டியது. அதையெல்லாம் உங்களுடைய ஆதரவினால் அதை தவிடுபொடியாக்கி ஜெயலலிதாவின் கனவை அம்மாவினுடைய அரசு நிறைவேற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே இன்றைக்கு அற்புதமான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
மக்களுக்காக உழைத்தவர்
ஜெயலலிதா பிறக்கின்றபொழுதே செல்வாக்கு மிக்கவராக பிறந்தவர். வாழ்கின்றபொழுது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். இந்த இயக்கத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா , முதலமைச்சராக பொறுப்பேற்று நாள்தோறும் 20 மணிநேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து, எண்ணற்ற திட்டங்களை நாட்டு மக்களுக்கு தந்து, இன்றைக்கு மக்கள் மனதிலே குடிகொண்டிருக்கின்றார் என்று சொன்னால், அவர் போட்ட திட்டம், எந்த ஆட்சியாளர்களாலும் அகற்ற முடியாத திட்டத்தை தமிழகத்திலே போட்டிருக்கின்றார்கள். ஆகவே தான் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுகின்ற கட்சியே, மீண்டும் தமிழகத்திலே வந்திருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே நினைவுகூர கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஆகவே, ஜெயலலிதாவின் அருமை, பெருமைகளை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இதையெல்லாம் பார்க்கின்றபோது, ஏன் நம் மீது பகைவர்களுக்கு இவ்வளவு கோபம்? கனி இருக்கின்ற மரத்திலே தான் கல்லடி படும் என்று கிராமத்திலே பழமொழி சொல்லுவார்கள். வலிமைமிக்க இயக்கம்அ.தி.மு.க . ஆகவே தான் அத்தனை எதிர்க்கட்சிகளும் நம் மீது பாய்கின்றார்கள். ஆகவே, எதிர்க்கட்சியினர் எவ்வளவு பாய்ந்தாலும் சரி, எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும் சரி, இடர்பாடுகள் கொடுத்தாலும் சரி, உங்கள் துணையோடு அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, உடைத்தெறிந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றியே தீருவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எவ்வளவோ சிரமங்கள்
தினகரன், யார் இவர் ? 10 ஆண்டு காலம் எங்கே போனார் ? வனவாசம் போயிருந்தார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இந்த தினகரன். இன்றைக்கு நம்மைப் பார்த்து கேட்கின்றார். மேடையிலே இருக்கின்றவர்கள் உங்களையும், என்னையும் துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது ? என்று இந்த நேரத்திலே கேட்க விரும்புகின்றேன். இங்கே வருகை புரிந்திருக்கின்றவர்களும், மேடையிலே அமர்ந்திருக்கின்றவர்களும் இரவு, பகல் பாராமல் இரத்தத்தை மண்ணிலே, சிந்தி, உழைத்ததின் காரணமாக, ஜெயலலிதாவின் செல்வாக்கின் காரணமாக இந்த கட்சியும், ஆட்சியும் உயர்ந்து நிற்கின்றது. இவர்களைப்போல துரோகிகள் யாரும் இல்லை. எவ்வளவோ சிரமத்தை கொடுத்தார்கள். ஜெயலலிதா அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்த கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி சென்றார்கள்.
தொண்டர்களின் உழைப்பு
ஜெயலலிதாவின் விசுவாசி என்று சொல்கின்றார்களே, ஏன் 10 ஆண்டுகாலம் நீக்கி வைத்தார்கள் இவர்களை, எண்ணிப் பாருங்கள். அம்மாவால், இந்தக் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக்கூடாது என்று நீக்கி வைக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகின்றார்கள். எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிந்தியுங்கள். இங்கு வருகை புரிந்திருக்கின்ற அ.தி.மு.க , பொதுக்குழு உறுப்பினர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கின்றார்கள். ஜெயலலிதா எந்தத் தேர்தலை வந்தாலும், அது கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆனாலும் சரி, உள்ளாட்சித் தேர்லானாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அம்மா நிறுத்துகின்ற வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது தான் இலட்சியம் என்ற குறிக்கோளோடு இயங்கிக் கொண்டிருக்கின்ற பொதுக்குழு உறுப்பினர்கள் நீங்கள். ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பு, அம்மாவிற்கு பெரும் செல்வாக்கை உருவாக்கியிருக்கின்றது. அம்மா செய்த சாதனைக்கு இன்றைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.
எப்படி நீக்கமுடியும் ?
இவர்கள், இன்றைக்கு ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்கின்றார்கள். என்ன தகுதி இருக்கின்றது எண்ணிப் பாருங்கள். ஏற்கனவே திட்டமிட்டு இந்த கட்சியை உடைக்க வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். நாள்தோறும் நீக்கல் பட்டியல். இவரே உறுப்பினரில்லை, இவர் எப்படி மற்றவர்களை நீக்கமுடியும். சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் நீ உறுப்பினரா? நீங்களே உறுப்பினராக இல்லாதபோது எப்படி நீங்கள் நீக்க முடியும். இவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்கு உண்மையாக இருக்கின்ற அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் இதைக் கூட்டி தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி, நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தில் என்ன கிடைத்தது? நீதிதான் வென்றது, என்றைக்கும் நீதி தான் வெல்லும். ஆகவே, இன்றைக்கு நீதி வென்றிருக்கிறது. முதல் கட்டத்திலேயே நமக்கு சாதகமாக இருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக் காட்டி, தினகரன் போல, ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு தொண்டன் மீது கூட இவர்கள் கை வைக்க முடியாது, பிரிந்து செல்லமாட்டார்கள்.
அழிக்கவும் முடியாது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம், அம்மா கட்டிக்காத்த இயக்கம், இருபெரும் தலைவர்களும் உருவாக்கிய இந்த இயக்கத்தை எவராலும் வெல்லவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். ஆகவே, சிலர் கைக்கூலியாக மாறிவிட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்தலைவர் ஸ்டாலின், அவர் எப்பொழுது பார்த்தாலும், மைக் கிடைத்துவிட்டால் போதும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், என்னய்யா உனக்கு துரோகம் செய்தது இந்த ஆட்சி? சொல்வார்களா? ஆகவே, இந்த ஆட்சி, முறைப்படி தேர்தலில் வென்ற ஆட்சி, சட்டமன்றத்திலே நிரூபிக்கப்பட்ட ஆட்சி, ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே, இன்றைக்கு ஆட்சி, அதிகாரம் இரண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.