முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக வாங்கப்பட்டுள்ள சிறிய மண்கூட்டும் இயந்திரத்தின் செயல்முறையினை ஆணையாளர் அனீஷ் சேகர் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மணல்களை அள்ளுவதற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள சிறிய மண்கூட்டும் இயந்திரத்தின் செயல்முறையினை ஆணையாளர் அனீஷ் சேகர்  பார்வையிட்டார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மணல்களை  மண்கூட்டும் பணியாளர்கள் மூலமாகவும், மேலும் ஒரு பெரிய மண்கூட்டும் வாகனம் மூலமும் ஏற்கனவே மணல்கள் அள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 2 சிறியரக மண்கூட்டும் வாகனங்கள் சுமார் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் செயல் பாடுகளை அறிவதற்காக மண்டலம் எண்.2 வார்டு எண்.44 கே.கே.நகர் ஆவின் பால்பண்னை சாலையில் சாலையோரங்களில் உள்ள மணல்களை புதிய சிறிய மண்கூட்டும் இயந்திரம் மூலம் மணல்கள் அள்ளுவதை ஆணையாளர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கோயம்புத்தூர் தனியார் நிறுவனத்தின் மூலம் சோதனை முறையில் சாலையோர மணல்கள் மற்றும் குப்பைகளை உறிஞ்சி அள்ளுவதற்காக புதிய பெரிய மண்கூட்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து வார்டு எண்.30 கோமதிபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோமதிபுரம் விரிவாக்கப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் பங்களிப்பு வைப்புத் தொகை வழங்கினால் உடனடியாக பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறினார். மேலும் அப்பகுதியில் வீடுகளிலிருந்து கழிவுநீரினை கழிவுநீர் தொட்டிகளிலிருந்தும், நேரடியாகவும் மழைநீர் வாய்க்காலிலும்  காலிஇடங்களிலும் விடும் வீடுகள் குறித்து கண்டறிந்து அந்த  வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் உதவி ஆணையாளர் பழனிச்சாமி, உதவி நகர்நல அலுவலர் பார்த்திப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் சி;த்திரவேல், உதவிப் பொறியாளர் (வாகனம்) அமர்தீப், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து