முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்க லெக்டர் நடராஜன் ஊக்கதொகை வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நடைபெற்ற முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ஊக்க மானிய தொகையினை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
 இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாதந்தோறும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் நல சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். 
 கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்;வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  அதன்பிறகு ஒரே மகன், ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை இராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு ஊக்க மானியத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4லட்சத்து 10ஆயிரம்  மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.  இந்நிகழ்வின் போது முன்னாள் படை வீரர்கள் நல துணை இயக்குநர் மணிவண்ணன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து