முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா விளையாட்டுப் போட்டியில் 3 தங்க பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கனடா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டியில் 3 தங்க பதக்கங்கள் வென்ற கணேசனுக்கு ரூ.15 லட்சம், 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற மனோஜூக்கு ரூ.11 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கனடா நாட்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 42 நாடுகள் கலந்து கொண்ட 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் குண்டு, வட்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொண்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், மனோஜ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய மூன்று நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அளவில் பெருமையை சேர்த்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 36 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கணேசன், நிலை-3 பிரிவில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் தலா 1 தங்கபதக்கம் வீதம் மூன்று தங்க பதக்கங்கள், மனோஜ், நிலை-2 பிரிவில் ஈட்டி எறிதலில் 1 தங்க பதக்கம் மற்றும் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் தலா 1 வெள்ளி பதக்கம் வீதம் 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் செல்வராஜ், நிலை -1 பிரிவில் ஈட்டி எறிதலில் 1 தங்க பதக்கம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர். அம்மா வழியில் செயல்படும் இந்த அரசுவிளையாட்டு வீரர்களை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வீரர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவர்கள் மென்மேலும் பலசாதனைகள் புரிய, தங்க பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 3.லட்சம், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 2. லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கவும் மேற்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஊக்கத் தொகையில், 15 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதனடிப்படையில், 3 தங்க பதக்கம் வென்ற கணேசனுக்கு ரூ.15 லட்சம், 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள்வென்ற மனோஜூக்கு ரூ.11 லட்சம் மற்றும் 1 தங்கம் வென்ற செல்வராஜூக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.31 லட்சம் உயரிய ஊக்கத் தொகையும் இவர்களின் பயிற்சியாளர்கள் ரஞ்சித் குமாருக்கு ரூ.3.90 லட்சம் மற்றும் சுந்தருக்கு ரூ.75 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது பயிற்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் எதிர்காலத்தில் மேன்மேலும், பல சாதனைகள் படைத்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைகள் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து