எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
பயிற்சி கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி ஆஸ்திரேலியா– இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இரு அணிகளிலும் 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது.
வார்னர் 64 ரன்
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹில்டன் கார்ட்ரைட் (0) ரன் எதுவுமின்றி வெளியேறினாலும் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று வலுவூட்டினர். துணை கேப்டன் டேவிட் வார்னர் (64 ரன், 48 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் ஸ்டீவன் சுமித் (55 ரன், 68 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிராவிஸ் ஹெட் (65 ரன், 63 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் அடித்தனர். இதற்கிடையே அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் (14 ரன்) வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா ஆகியோரின் பந்து வீச்சுக்கு மட்டுமே ஆஸ்திரேலியர்கள் கொஞ்சம் தடுமாறினர். மற்றவர்களின் பவுலிங்கை சிரமமின்றி எதிர்கொண்டனர்.
ஆஸ்திரேலியா 347 ரன்
இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிசும், விக்கெட் கீப்பர் மேத்யூஸ் வேட்டும் அதிரடி காட்டினர். இதன் பலனாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் 101 ரன்களை திரட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.
ஸ்டோனிஸ் 76 ரன்களும் (60 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), மேத்யூ வேட் 45 ரன்களும் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். கிரிக்கெட் வாரிய லெவன் அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், குஷாங் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் 8 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
லெவன் அணி தோல்வி
தொடர்ந்து களம் புகுந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியில் திரிபாதி 7 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் ஆஸ்திரேலியாவின் ‘மெகா’ ஸ்கோரை நெருங்க முடியவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ‘உள்ளூர் ஹீரோ’ வாஷிங்டன் சுந்தர் (11 ரன், 13 பந்து, 2 பவுண்டரி) பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். இதே போல் கேப்டன் குர்கீரத்சிங் மான் 27 ரன்களில் வீழ்ந்தார்.
முடிவில் வாரிய தலைவர் லெவன் அணி 48.2 ஓவர்களில் 244 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் 103 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 43 ரன்களும், மயங்க் அகர்வால் 42 ரன்களும், குஷாங் பட்டேல் 41 ரன்களும், அக்ஷய் கார்னிவர் 40 ரன்களும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், கனே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.