எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
பயிற்சி கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி ஆஸ்திரேலியா– இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இரு அணிகளிலும் 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது.
வார்னர் 64 ரன்
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹில்டன் கார்ட்ரைட் (0) ரன் எதுவுமின்றி வெளியேறினாலும் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று வலுவூட்டினர். துணை கேப்டன் டேவிட் வார்னர் (64 ரன், 48 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் ஸ்டீவன் சுமித் (55 ரன், 68 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிராவிஸ் ஹெட் (65 ரன், 63 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் அடித்தனர். இதற்கிடையே அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் (14 ரன்) வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா ஆகியோரின் பந்து வீச்சுக்கு மட்டுமே ஆஸ்திரேலியர்கள் கொஞ்சம் தடுமாறினர். மற்றவர்களின் பவுலிங்கை சிரமமின்றி எதிர்கொண்டனர்.
ஆஸ்திரேலியா 347 ரன்
இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிசும், விக்கெட் கீப்பர் மேத்யூஸ் வேட்டும் அதிரடி காட்டினர். இதன் பலனாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் 101 ரன்களை திரட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.
ஸ்டோனிஸ் 76 ரன்களும் (60 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), மேத்யூ வேட் 45 ரன்களும் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். கிரிக்கெட் வாரிய லெவன் அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், குஷாங் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் 8 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
லெவன் அணி தோல்வி
தொடர்ந்து களம் புகுந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியில் திரிபாதி 7 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் ஆஸ்திரேலியாவின் ‘மெகா’ ஸ்கோரை நெருங்க முடியவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ‘உள்ளூர் ஹீரோ’ வாஷிங்டன் சுந்தர் (11 ரன், 13 பந்து, 2 பவுண்டரி) பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். இதே போல் கேப்டன் குர்கீரத்சிங் மான் 27 ரன்களில் வீழ்ந்தார்.
முடிவில் வாரிய தலைவர் லெவன் அணி 48.2 ஓவர்களில் 244 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் 103 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 43 ரன்களும், மயங்க் அகர்வால் 42 ரன்களும், குஷாங் பட்டேல் 41 ரன்களும், அக்ஷய் கார்னிவர் 40 ரன்களும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், கனே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.