முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் பணியாளர்களின் வருகைப்பதிவேடுகளை ஆணையாளர் அனீஷ் சேகர் திடீர் ஆய்வு

வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் பணியாளர்களின் வருகைப்பதிவேடு குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்   திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள பொறியியல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு, மைய வருவாய்ப் பிரிவு, கணக்கு பிரிவு, நகரமைப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, இயக்க பதிவேடு, விடுப்பு, அனுமதி விடுப்பு குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு வருகைப் பதிவேட்டின்படி பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார். பணியாளர்கள் அலுவலக நிமித்தமாக வெளியில் சென்று வருவதை இயக்க பதிவேட்டில்  (ஆழஎநஅநவெ சுநபளைவநச) பதிந்து இயக்க பதிவேட்டினை முறையாக பராமரிக்குமாறு கூறினார். மருத்துவ விடுப்பு எடுத்துள்ள பணியாளர்களின் மருத்துவச் சான்றினை ஆய்வு செய்தார். கணக்குப் பிரிவில் உள்ள பதிவேடுகள் வைத்துள்ள பராமரிப்பு அறையை பார்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தார். பதிவேடுகள் பராமரிப்பு அறையில் தேவையில்லாமல் உள்ள பொருட்களையும் உடைந்த தளவாட சாமான்களையும் அகற்றுமாறு கூறினார். பொது சுகாதாரப் பிரிவில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புக்களை பார்வையிட்டு முடிந்த கோப்புக்களை முறையாக பதிந்து பதிவு வைப்பறையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் திரு.ப.மணிவணணன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல்,உதவி செயற்பொறியாளர் திரு.மனோகரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து