எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- சேதுபதி மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த முகவை ஊருணி ராமநாதபுரம் செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஆண்டாண்டு காலமாக வறட்சியான மாவட்டம் என்று பெயர் பெற்ற ராமநாதபுரத்தின் ஒரே நீர் ஆதாரம் வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும்தான். இவை இரண்டும் இந்த மாவட்டத்தை ஆண்டுதோறும் வஞ்சித்துவிடுவதால் ராமநாதபுரத்திற்கு வறட்சியான மாவட்டம் என்ற பெயர் காலம்காலமாக இருந்து வருகிறது. மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வைகை தண்ணீர் ஆண்டுதோறும் ராமநாதபுரத்திற்கு வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் இந்த வைகை தண்ணீரை 50-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சேமித்து வைத்து பயன்படுத்தி வந்தனர். வைகை தண்ணீரால் பெரியகண்மாய் நிரம்பியதும் முறையாக அமைக்கப்பட்டிருந்த மடைகள் மற்றும் வரத்துகால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு அனைத்து ஊரணிகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பும் வகையில் சங்கலி கோர்வை போல வடிமைக்கப்பட்டிருந்தன. தொடர் வறட்சி காரணமாகவும், இந்த நீர் நிலைகள் தொடர் வறட்சி மற்றும் ஆக்கிரமிப்புகளால் வரத்துகால்கள், மடைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக இந்த நீர்நிலைகள் அனைத்தும் படிப்படியாக தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், தற்போதைய கலெக்டர் முனைவர் நடராஜன் ஆகியோரின் தொடர் நடவடிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பல ஊரணிகள், கண்மாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் லெட்சுமிபுரம் ஊருணி கடந்த ஆண்டு முழுமையாக ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு காவலர்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த நடவடிக்கையின் பயனாக தற்போது அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததுடன் நிலத்தடி நீரின் தன்மையும் மாறி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ராமநாதபுரம் நகரின் தொன்மை சிறப்பு வாய்ந்த பழமையான முகவை ஊரணியை தூர்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் முனைவர் நடராஜன், வருவாய் கோட்டாட்சியர் பேபி ஆகியோரின் ஆலோசணையின்பேரில் செய்யதம்மாள் அறக்கட்டளையின் சார்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா கூறியதாவது:- ராமநாதபுரத்தில் எங்களின் அறக்கட்டளையின் சார்பில் ஊருணிகளை பாதுகாக்கவும், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காகவும் கடந்த 17 ஆண்டுகளாக எங்களது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக பசுமைப்படை என்ற அமைப்பினை ஏற்படுத்தி ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை ஒன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளோம்.
ஏற்கனவே, ராமநாதபுரம் லெட்சுமிபுரம் ஊருணி பாராங்குண்டு ஊருணி, ராஜசூரிய மடை ஊருணி, மல்லிகை கண்மாய் போன்றவற்றை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து வருகிறோம். ராமநாதபுரத்தில் உள்ள சிதம்பரம்பிள்ளை ஊருணியில் 700 மரக்கன்றுகளும், லெட்சுமிபுரம் ஊருணியில் 900 மரக்கன்றுகளும், செம்பொன்குன்று ஊருணியில் 100 மரக்கன்றுகளும் நட்டு வளர்த்து வருகிறோம். தற்போது, பழமை வாய்ந்த முகவை ஊருணியை தூர்வாரி சீரமைத்து கரைகளை பலப்படுத்தி வருகிறோம். இதன்பின்னர் ஊருணியை சுற்றி வேலி அமைத்து 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இதற்காக செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.35 லட்சம் நிதி செலவிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பெரியகண்மாயில் இருந்து முகவை ஊருணி மற்றும் லெட்சுமிபுரம் ஊருணிக்கு தண்ணீர் வரக்கூடிய 5 கிலோ மீட்டர் நீள வரத்துக்கால்வாயை கண்டறிந்து அவற்றை புனரமைத்து உள்ளோம். இவ்வாறு கூறினார். அப்போது பசுமைப்படை ஆசிரியர் ஜாகிர்உசேன், முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.