முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரிய பிரச்சினை குத்தேரஸ் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்: கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக, அந்த நாட்டின் மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதார தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, “வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருவதால், கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். ராணுவ நடவடிக்கை எடுத்தால் பேரழிவுதான் ஏற்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து