எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குரு பார்க்க கோடி நன்மை
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாக்கிற்கு ஏற்ப பெறுதற்கரிய மானிடப் பிறவியை பெற்றுள்ள நாம் இந்நிலையில் இருந்து மேலான நிலைக்கு செல்வதற்கு பரிபூரண இறையருள் அவசியமாகும். நம்முடைய வாழ்க்கை என்பது நம்முடைய வினைப் பயன்களை நமக்கு அளித்து நம்முடைய வாழ்க்கையைச் செலுத்துவதில் நவக்கிரகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நவக்கிரகங்களுடைய ஆலயத்திற்கு ஆட்படாத மனிதப் பிறவியே இல்லை என்பது உண்மை.
பிறவிகளில் மானுடப் பிறவி உயர்ந்தது என்பதே மனிதனுக்கு அடிப்படையிலேயே அமைந்த சிந்திக்கக் கூடிய அறிவைப் பெற்றதினால்தான் ஆகும். அப்படிப்பட்ட மிக உயர்ந்த அறிவையும், ஞானத்தையும் கொடுக்கக் கூடிய தெய்வங்களிலே குரு ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்தி முதன்மையானவர் என்பது அனைவரும் அறிந்தது. நம்முடைய பாரம்பரியத்தில் மாதா, பிதா, குரு என்று குருவிற்கு ஒரு தனி சிறப்பான இடத்தை சொல்லியிருக்கிறார்கள்.
குருர் ப்ரஹ்மர் குருர் விஷ்ணு குரூர் தேவோ மகேச்வர;
குரு ஸாஷாத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம : என்று குருவை வணங்குதல் அனைவரையும் வணங்குவதற்கு சமமானதாகச் சொல்லப்படுகின்றது. இவரைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்காரணங்களின் தூய்மைக்கும், மூலப்பொருளாக உள்ளவர் வியாழன், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ஆச்சார்யராக விளங்கக் கூடியவரும், மூவுலகங்களின் புத்தி, சக்தியாக விளங்கக் கூடிய குருபகவான் மனித வாழ்க்கையில் அனைத்து சுப விசேஷங்களையும் அருளக்கூடிய ஸ்ர்வமங்களகாரகன் ஆக விளங்குகின்றனர்.
ஒருவருடைய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் சற்று ஏறத்தாழ இருந்தாலும் கூட குரு ஒருவர் மட்டும் உயர்ந்திருந்தால் ஒருவர் எல்லா நற்பலன்களையும் அனுபவிக்க முடியும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட குருபகவான் தமிழகத்தில் ஆலங்குடி ஈஸ்வரன் கோயிலில் தட்சிணாமூர்த்தியாகவும், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் ஈஸ்வரன் கோயிலில் யோகதட்சிணாமூர்த்தியாகவும், மயிலாடுதுறையில் வல்லல் என்ற ஊரில் ஈஸ்வரன் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாகவும் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில்களில் எல்லாம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பரிவார மூர்த்தியாக மட்டுமே உள்ளார். ஆனால் தமிழகத்திலேயே வேலூரில் குரு ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி என்று தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
இத்திருக்கோயிலில் சொர்ணபந்தத்துடன் ஸ்ரீகுருமேதா தட்சிணாமூர்த்தி சுவாமி அமைந்திருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் கோட்டை நகரம் என்று அழைக்கப்படுகின்ற வேலூரின் தென்பாகத்தில் வள்ளலார் நகர் சாயிநாதபுரத்தில் தென்முகக் கடவுளாகிய குரு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி கோயில் கொண்டு எழுந்தருளி அருளாசி புரிந்து வருகின்றார்.
இத்திருக்கோயிலில் குருபகவானுக்கு விசேஷ பூஜைகள், ஹோமங்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் அனைத்து தோஷங்களுக்குரிய பரிகாரங்களையும், பூஜைகளையும் செய்வித்தல் என்பது ஸர்வார்த்த தோஷ பரிகாரமாக கருதப்படுகிறது. வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருள்பாவிக்க கூடிய மூர்த்தியாக குருபகவான் இங்கிருப்பதினால் இது மிகச்சிறப்பு வாய்ந்த பிரார்த்தனா ஷேத்திரமாக விளங்குகிறது.
ஸ்ரீகுருபரிகார தல சிறப்பு அம்சங்கள் : இத்திருக்கோயிலின் முன்வாயிலில் சுயம்பு வலம்புரி விநாயகர் தோன்றி இருப்பது சிறப்பாகும். இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு விநாயகர், பிள்ளையார்பட்டியில் உள்ளது போன்று ஸ்ரீ வலம்புரி விநாயகர் தும்பிக்கையில் அமிர்தகலசம் வைத்துக்கொண்டு வடக்கு பார்த்து அமைந்துள்ளது.
வடக்கு பார்த்துஸ்ரீவிஷ்ணு துர்கை அமைந்துள்ளது. வடக்கு பார்த்து வள்ளி தேவசேனாம்பிகா சமேத சுப்பிரமணி சுவாமி அமைந்துள்ளது. தெற்கு நோக்கி ஸ்ரீ யோக பைரவர் தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக அமைந்துள்ளார். கிழக்கு நோக்கி 1000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஸ்ரீ கிரி பக்த ஆஞ்சநேயர் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அருள்மிகு குரு ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்தி நமது வேலூர் கோட்டையில் இருந்து தென் திசையில் அமைந்துள்ளது மிகுந்த சிறப்பம்சமாகும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து விக்ரகங்களும் ஒரே சிற்பியின் கைவண்ணத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு நிலம் வழங்கியவர் பெயரும் உயர்திரு.யு.வி.தஷிணாமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. /அதே போன்று இந்த கோயிலை 28.10.1994&ல் ஆரம்பித்து தனி நபராக இருந்து கட்டி முடித்து கும்பாபிஷேகம் 10.02.2001ல் செய்து கொடுத்தவரும், தற்போது அறங்காவலருமாக உள்ள எல்.தட்சிணாமூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் வாகனத்துடன் அமைந்துள்ளது.
திருக்கோயிலின் உற்சவர் வழிபாட்டு விழா : தமிழகத்திலேயே இத்திருக்கோயிலில் மட்டுமே தட்சிணாமூர்த்தி ஸ்வாமி உற்சவ மூர்த்தியாக உள்ளார். குருபெயர்ச்சியின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் உற்சவர், வீதி உலா வழிபாடு நடைபெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
சிறப்பு வருட வழிபாடு : விநாயகர் சதுர்த்தி அன்றும், நவராத்திரி பூஜை அன்றும், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், ஆண்டுவிழா மற்றும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, இராகு, கேது பெயர்ச்சி, இந்த நாட்களில் சிறப்பு இலட்சார்ச்சனையும் சிறப்பு ஹோமங்களும் சிறப்பு அலங்கார ஆராதனைகளும் நடைபெறும்.
சிறப்பு மாத வழிபாடு : ஸ்ரீவலம்புரி விநாயகர்க்கு சங்கடஹர சதுர்த்தியில் மாலையில் சிறப்பு ஹோமங்கள் (ம) அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். பௌர்ணமி அன்று மாலையில் ஹோமங்கள் (ம) சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மகா ஜோதி ஏற்றி வழிபடுகிறார்கள். ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஸ்ரீ யோக பைவர்க்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இராகு கால நேரத்தில் ஹோமங்கள் (ம) சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வருகிறோம். அன்று பக்தர்கள் அவர்களது ஜாதகத்தை வைத்து வழிபடுகிறார்கள்.
சிறப்பு வார வழிபாடு : ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் குருபகவானுக்கு குரு மூல மந்திரம் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அருள்மிகுஸ்ரீ விஷ்ணு துர்கையம்மனுக்கு இராகு கால நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். மாலை 6.00 மணிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம், சனிக்கிழமை சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஸ்ரீகிரி பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு மாலை இராகு கால நேரத்தில் ஸ்ரீயோக பைவரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம்.
நித்யகால பூஜை : தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தொடர்ந்து இருக்கும்.
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் காலை 4.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் கோயில் நடை திறந்து இருக்கும். அன்றைய தினம் சிறப்பு அப«ஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்படும்.
இத்திருக்கோயிலில் ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்திக்கும், வலம்புரி விநாயகருக்கும் ஸ்ரீவள்ளி, தேவசேனாம்பிகா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் விசேஷ நாட்களில் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீவலம்புரி விநாயகர், குரு ஸ்ரீமேதா தஷிணாமூர்த்தி ஆலயம், 19, முதல் நெடுஞ்சாலை, வள்ளலார் நகர், சாயிநாதபுரம், வேலூர்-1.
செல் : 94437 19412
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.