எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குரு பார்க்க கோடி நன்மை
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாக்கிற்கு ஏற்ப பெறுதற்கரிய மானிடப் பிறவியை பெற்றுள்ள நாம் இந்நிலையில் இருந்து மேலான நிலைக்கு செல்வதற்கு பரிபூரண இறையருள் அவசியமாகும். நம்முடைய வாழ்க்கை என்பது நம்முடைய வினைப் பயன்களை நமக்கு அளித்து நம்முடைய வாழ்க்கையைச் செலுத்துவதில் நவக்கிரகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நவக்கிரகங்களுடைய ஆலயத்திற்கு ஆட்படாத மனிதப் பிறவியே இல்லை என்பது உண்மை.
பிறவிகளில் மானுடப் பிறவி உயர்ந்தது என்பதே மனிதனுக்கு அடிப்படையிலேயே அமைந்த சிந்திக்கக் கூடிய அறிவைப் பெற்றதினால்தான் ஆகும். அப்படிப்பட்ட மிக உயர்ந்த அறிவையும், ஞானத்தையும் கொடுக்கக் கூடிய தெய்வங்களிலே குரு ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்தி முதன்மையானவர் என்பது அனைவரும் அறிந்தது. நம்முடைய பாரம்பரியத்தில் மாதா, பிதா, குரு என்று குருவிற்கு ஒரு தனி சிறப்பான இடத்தை சொல்லியிருக்கிறார்கள்.
குருர் ப்ரஹ்மர் குருர் விஷ்ணு குரூர் தேவோ மகேச்வர;
குரு ஸாஷாத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம : என்று குருவை வணங்குதல் அனைவரையும் வணங்குவதற்கு சமமானதாகச் சொல்லப்படுகின்றது. இவரைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்காரணங்களின் தூய்மைக்கும், மூலப்பொருளாக உள்ளவர் வியாழன், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ஆச்சார்யராக விளங்கக் கூடியவரும், மூவுலகங்களின் புத்தி, சக்தியாக விளங்கக் கூடிய குருபகவான் மனித வாழ்க்கையில் அனைத்து சுப விசேஷங்களையும் அருளக்கூடிய ஸ்ர்வமங்களகாரகன் ஆக விளங்குகின்றனர்.
ஒருவருடைய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் சற்று ஏறத்தாழ இருந்தாலும் கூட குரு ஒருவர் மட்டும் உயர்ந்திருந்தால் ஒருவர் எல்லா நற்பலன்களையும் அனுபவிக்க முடியும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட குருபகவான் தமிழகத்தில் ஆலங்குடி ஈஸ்வரன் கோயிலில் தட்சிணாமூர்த்தியாகவும், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் ஈஸ்வரன் கோயிலில் யோகதட்சிணாமூர்த்தியாகவும், மயிலாடுதுறையில் வல்லல் என்ற ஊரில் ஈஸ்வரன் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாகவும் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில்களில் எல்லாம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பரிவார மூர்த்தியாக மட்டுமே உள்ளார். ஆனால் தமிழகத்திலேயே வேலூரில் குரு ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி என்று தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
இத்திருக்கோயிலில் சொர்ணபந்தத்துடன் ஸ்ரீகுருமேதா தட்சிணாமூர்த்தி சுவாமி அமைந்திருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் கோட்டை நகரம் என்று அழைக்கப்படுகின்ற வேலூரின் தென்பாகத்தில் வள்ளலார் நகர் சாயிநாதபுரத்தில் தென்முகக் கடவுளாகிய குரு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி கோயில் கொண்டு எழுந்தருளி அருளாசி புரிந்து வருகின்றார்.
இத்திருக்கோயிலில் குருபகவானுக்கு விசேஷ பூஜைகள், ஹோமங்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் அனைத்து தோஷங்களுக்குரிய பரிகாரங்களையும், பூஜைகளையும் செய்வித்தல் என்பது ஸர்வார்த்த தோஷ பரிகாரமாக கருதப்படுகிறது. வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருள்பாவிக்க கூடிய மூர்த்தியாக குருபகவான் இங்கிருப்பதினால் இது மிகச்சிறப்பு வாய்ந்த பிரார்த்தனா ஷேத்திரமாக விளங்குகிறது.
ஸ்ரீகுருபரிகார தல சிறப்பு அம்சங்கள் : இத்திருக்கோயிலின் முன்வாயிலில் சுயம்பு வலம்புரி விநாயகர் தோன்றி இருப்பது சிறப்பாகும். இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு விநாயகர், பிள்ளையார்பட்டியில் உள்ளது போன்று ஸ்ரீ வலம்புரி விநாயகர் தும்பிக்கையில் அமிர்தகலசம் வைத்துக்கொண்டு வடக்கு பார்த்து அமைந்துள்ளது.
வடக்கு பார்த்துஸ்ரீவிஷ்ணு துர்கை அமைந்துள்ளது. வடக்கு பார்த்து வள்ளி தேவசேனாம்பிகா சமேத சுப்பிரமணி சுவாமி அமைந்துள்ளது. தெற்கு நோக்கி ஸ்ரீ யோக பைரவர் தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக அமைந்துள்ளார். கிழக்கு நோக்கி 1000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஸ்ரீ கிரி பக்த ஆஞ்சநேயர் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அருள்மிகு குரு ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்தி நமது வேலூர் கோட்டையில் இருந்து தென் திசையில் அமைந்துள்ளது மிகுந்த சிறப்பம்சமாகும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து விக்ரகங்களும் ஒரே சிற்பியின் கைவண்ணத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு நிலம் வழங்கியவர் பெயரும் உயர்திரு.யு.வி.தஷிணாமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. /அதே போன்று இந்த கோயிலை 28.10.1994&ல் ஆரம்பித்து தனி நபராக இருந்து கட்டி முடித்து கும்பாபிஷேகம் 10.02.2001ல் செய்து கொடுத்தவரும், தற்போது அறங்காவலருமாக உள்ள எல்.தட்சிணாமூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் வாகனத்துடன் அமைந்துள்ளது.
திருக்கோயிலின் உற்சவர் வழிபாட்டு விழா : தமிழகத்திலேயே இத்திருக்கோயிலில் மட்டுமே தட்சிணாமூர்த்தி ஸ்வாமி உற்சவ மூர்த்தியாக உள்ளார். குருபெயர்ச்சியின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் உற்சவர், வீதி உலா வழிபாடு நடைபெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
சிறப்பு வருட வழிபாடு : விநாயகர் சதுர்த்தி அன்றும், நவராத்திரி பூஜை அன்றும், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், ஆண்டுவிழா மற்றும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, இராகு, கேது பெயர்ச்சி, இந்த நாட்களில் சிறப்பு இலட்சார்ச்சனையும் சிறப்பு ஹோமங்களும் சிறப்பு அலங்கார ஆராதனைகளும் நடைபெறும்.
சிறப்பு மாத வழிபாடு : ஸ்ரீவலம்புரி விநாயகர்க்கு சங்கடஹர சதுர்த்தியில் மாலையில் சிறப்பு ஹோமங்கள் (ம) அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். பௌர்ணமி அன்று மாலையில் ஹோமங்கள் (ம) சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மகா ஜோதி ஏற்றி வழிபடுகிறார்கள். ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஸ்ரீ யோக பைவர்க்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இராகு கால நேரத்தில் ஹோமங்கள் (ம) சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வருகிறோம். அன்று பக்தர்கள் அவர்களது ஜாதகத்தை வைத்து வழிபடுகிறார்கள்.
சிறப்பு வார வழிபாடு : ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் குருபகவானுக்கு குரு மூல மந்திரம் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அருள்மிகுஸ்ரீ விஷ்ணு துர்கையம்மனுக்கு இராகு கால நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். மாலை 6.00 மணிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம், சனிக்கிழமை சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஸ்ரீகிரி பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு மாலை இராகு கால நேரத்தில் ஸ்ரீயோக பைவரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம்.
நித்யகால பூஜை : தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தொடர்ந்து இருக்கும்.
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் காலை 4.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் கோயில் நடை திறந்து இருக்கும். அன்றைய தினம் சிறப்பு அப«ஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்படும்.
இத்திருக்கோயிலில் ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்திக்கும், வலம்புரி விநாயகருக்கும் ஸ்ரீவள்ளி, தேவசேனாம்பிகா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் விசேஷ நாட்களில் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீவலம்புரி விநாயகர், குரு ஸ்ரீமேதா தஷிணாமூர்த்தி ஆலயம், 19, முதல் நெடுஞ்சாலை, வள்ளலார் நகர், சாயிநாதபுரம், வேலூர்-1.
செல் : 94437 19412
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.