முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங்- ரெய்னாவுக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை தமைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை: யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவருக்குமான கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

இது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், தற்போதைய உடல்தகுதி, பார்ம் ஆகியவற்றுக்கான அளவீட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணி தேர்வுக்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.அந்த வகையில், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை. 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை அடையாளம் காண ஆஸ்திரேலியா தொடர் உதவிகரமாக இருக்கும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.யுவராஜ் மற்றும் ரெய்னாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் என கூறப்பட்டு வரும் நிலையில் ரவி சாஸ்திரியின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து